மதுரை: தமிழகத்தை உலுக்கி வரும் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்ட, "பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எக்ஸ்போர்ட்' உரிமையாளர், பழனிச்சாமி, மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார். கிரானைட் மோசடியில், 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், முறைகேடுகள் குறித்து விசாரிக்க, பழனிச்சாமியை ரகசிய இடத்திற்கு, தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, பிராதுகாரன் பட்டியைச் சேர்ந்த, பின்னத்தேவர் மகன், பி.ஆர்.பழனிச்சாமி, 60. இவர், மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், கீழவளவு, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதி யில், "பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் தொழில் நடத்தி வந்தார். இவரது, தலைமை அலுவலகம் மதுரை - மேலூர் ரோடு, தெற்குத் தெருவில் உள்ளது.
18 தனிப்படைகள்: கிரானைட் தொழிலில் முறைகேடுகள் குறித்து, மதுரை கலெக்டர், அன்சுல் மிஸ்ரா உத்தரவுப்படி, துணை கலெக்டர் குணசேகரன், கலால் உதவி இயக்குனர் ரவீந்திரன் தலைமையில், 18 தனிப்படைகள் விசாரணை நடத்தின. இதில், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் உட்பட, முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல கிரானைட் நிறுவனங்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டன. பல கோடி மதிப்புள்ள, கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பழனிச்சாமி, மனைவி விஜயலட்சுமி, மகன்களும், கிரானைட் நிறுவனங்களின் பங்குதாரர்களுமான சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் ஒருவர் மீது, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பி.ஆர்.பழனிச்சாமி உட்பட, அனைவரும் தலைமறைவாக இருந்தனர்.
எஸ்.பி.,யிடம் சரண்: இவர்களை கைது செய்ய, போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் மேற்பார்வையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பி.ஆர். பழனிச்சாமி, போலீஸ் எஸ்.பி., முன் சரணடைவதாக வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகை நிருபர்களுக்கு, நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிருபர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். நேற்று பகல், 12.30 மணிக்கு வழக்கறிஞர்கள், புடைசூழ, பி.ஆர்.பழனிச்சாமி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். பின், அவர், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் முன், பகல், 1 மணிக்கு சரணடைந்தார்.
"நான் குற்றமற்றவன்...: மீண்டும் தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என, பழனிச்சாமி சார்பில், விளக்கக் கடிதம் ஒன்றை, எஸ்.பி.,யிடம் வழக்கறிஞர்கள் கொடுத்தனர். கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அவரை, ரகசிய இடத்திற்கு, தனிப்படை போலீசார் அழைத் துச் சென்றனர். சரணடைந்தது குறித்து, கருத்து கூற, பழனிச்சாமி மறுத்து விட்டார்.
சரணடைந்த பின்னணி: தலைமறைவாக இருந்த பி.ஆர்.பழனிச்சாமியை பிடிக்க, அவருக்கு நெருக்கமானவர்களை பட்டியலிட்டு, அவர்களது வீடுகளில், சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 23 பேரின் வீடுகள் தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார், "போனில் பழனிச்சாமி தொடர்பு கொண்டால், சரணடையும்படி வலியுறுத்துங்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த வழக்குகளை பதிவு செய்யத் துவங்கிய போலீசார், அவரது சொத்து, வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அவர் சரணடையாதபட்சத்தில் மேலும் சில அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலும் சோதனையிட, போலீசார் முடிவு செய்தனர். இதனால், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த பின், பி.ஆர்.பழனிச்சாமி சரணடைய முடிவு செய்துள்ளார். அதிலும், கோர்ட்டில் சரணடைந்தால், மீண்டும் போலீசார் கஸ்டடியில் எடுத்து, கடுமையாக விசாரிப்பர்; விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தால், வழக்கு விசாரணையின் போது, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு அமையும் என்பதால், எஸ்.பி., அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த பி.ஆர்.பி.,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பின்னத்தேவர் மகன் பி.பழனிச்சாமி,60. இவர், முன்பு, பெரியாறு - வைகை பிரதான கால்வாய் பணியின் ஒரு பகுதியின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவரது மனைவி விஜயலட்சுமி. மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மகள் சிவரஞ்சனி.
திருச்சி கல்குவாரி ஒன்றில், கிரானைட் கிடைக்கும் என திருச்சி அரசியல் புள்ளி ஒருவர் தோண்டினார். கிரானைட் கிடைக்கவில்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை பழனிச்சாமி குறைந்த விலைக்கு வாங்கினார். அக்குவாரியில் ஜல்லி, உடைகல் சேகரிக்க ஆழமாக தோண்டினார். அப்போது விலை மதிக்க முடியாத ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள் தோண்ட, தோண்ட கிடைத்தது. இதனால், "சினிமா பாணியில்' குறுகிய காலத்திலேயே, பழனிச்சாமி மிகப்பெரிய
வளர்ச்சியை கண்டார். இவரது பார்வை, மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் திரும்பியது. இங்கு விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கினார். இவரது கைராசி தோண்டும் இடமெல்லாம் கிரானைட் கற்கள் குவியல், குவியலாக கிடைத்தது. ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்களை, அழகாய் செதுக்கி ஏற்றுமதி செய்யத் துவங்கினார். அசுர வளர்ச்சி கண்டது இவரது நிறுவனம். "பழனிச்சாமி' "பி.ஆர்.பி.,' ஆனார். தனது கிரானைட் நிறுவனங்களுக்கு "பி.ஆர்.பி., கிரானைட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்' என பெயரிட்டார். தலைமை அலுவலகத்தை மதுரை - மேலூர் ரோடு தெற்குத்தெருவில் நிறுவினார். 1990ம் ஆண்டில் இருந்து பி.ஆர்.பி.,யின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தது.
கிரானைட் உலகின் "முடிசூடா மன்னன்', "கிரானைட் கிங்' என அழைக்கப்பட்டார். அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்குடன், தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். இவரைத் தேடிச்சென்று "தேர்தல் நிதி' பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிகம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆதரவுக்கரம் நீட்டுவார். சிறந்த ஏற்றுமதி நிறுவனத்திற்கான ஜனாதிபதி விருதுகள் பி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டன. பி.ஆர்.பி.,யின் கிரானைட் நிறுவனங்களின் வளர்ச்சி "அசுர வேகம்' கண்டது. கிரானைட் தவிர போக்குவரத்து துறையிலும், பி.ஆர்.பி., தடம் பதித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி வழித்தடங்களில் பி.ஆர்.பி., பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன.
வழித்தட (ரூட் பெர்மிஷன்) அனுமதியுடன் விற்பனைக்கு வரும் பஸ்களை வாங்குவது, பி.ஆர்.பி.,யின் ஸ்டைல். இந்தியாவின், பல்வேறு விமானநிலையங்களில் பி.ஆர்.பி.,யின் கிரானைட்கள் அலங்கரிக்கின்றன. அமெரிக்க வெள்ளைமாளிகை புதுப்பிக்கப்பட்டபோது, இங்கிருந்து முதல்தர ஏற்றுமதி கிரானைட் கற்களை அமெரிக்காவிற்கு பி.ஆர்.பி., ஏற்றுமதி செய்தார் என்று அவரைப்பற்றி பெருமைப்படுகின்றனர் நிறுவன ஊழியர்கள். வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை கொண்டு செல்ல, சொந்தமாக சரக்கு கப்பல் வாங்க திட்டமிட்டார். ""நேரம் சரியில்லை. தற்போது புதிய முதலீடு வேண்டாம்,'' என ஜோதிடர் அட்வைஸ் செய்ததால், கப்பல் வாங்கும் முயற்சியை சமீபத்தில் கைவிட்டாராம்.
18 தனிப்படைகள்: கிரானைட் தொழிலில் முறைகேடுகள் குறித்து, மதுரை கலெக்டர், அன்சுல் மிஸ்ரா உத்தரவுப்படி, துணை கலெக்டர் குணசேகரன், கலால் உதவி இயக்குனர் ரவீந்திரன் தலைமையில், 18 தனிப்படைகள் விசாரணை நடத்தின. இதில், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் உட்பட, முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல கிரானைட் நிறுவனங்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டன. பல கோடி மதிப்புள்ள, கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பழனிச்சாமி, மனைவி விஜயலட்சுமி, மகன்களும், கிரானைட் நிறுவனங்களின் பங்குதாரர்களுமான சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் ஒருவர் மீது, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பி.ஆர்.பழனிச்சாமி உட்பட, அனைவரும் தலைமறைவாக இருந்தனர்.
எஸ்.பி.,யிடம் சரண்: இவர்களை கைது செய்ய, போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் மேற்பார்வையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பி.ஆர். பழனிச்சாமி, போலீஸ் எஸ்.பி., முன் சரணடைவதாக வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகை நிருபர்களுக்கு, நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிருபர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். நேற்று பகல், 12.30 மணிக்கு வழக்கறிஞர்கள், புடைசூழ, பி.ஆர்.பழனிச்சாமி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். பின், அவர், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் முன், பகல், 1 மணிக்கு சரணடைந்தார்.
"நான் குற்றமற்றவன்...: மீண்டும் தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என, பழனிச்சாமி சார்பில், விளக்கக் கடிதம் ஒன்றை, எஸ்.பி.,யிடம் வழக்கறிஞர்கள் கொடுத்தனர். கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அவரை, ரகசிய இடத்திற்கு, தனிப்படை போலீசார் அழைத் துச் சென்றனர். சரணடைந்தது குறித்து, கருத்து கூற, பழனிச்சாமி மறுத்து விட்டார்.
சரணடைந்த பின்னணி: தலைமறைவாக இருந்த பி.ஆர்.பழனிச்சாமியை பிடிக்க, அவருக்கு நெருக்கமானவர்களை பட்டியலிட்டு, அவர்களது வீடுகளில், சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 23 பேரின் வீடுகள் தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார், "போனில் பழனிச்சாமி தொடர்பு கொண்டால், சரணடையும்படி வலியுறுத்துங்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த வழக்குகளை பதிவு செய்யத் துவங்கிய போலீசார், அவரது சொத்து, வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அவர் சரணடையாதபட்சத்தில் மேலும் சில அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலும் சோதனையிட, போலீசார் முடிவு செய்தனர். இதனால், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த பின், பி.ஆர்.பழனிச்சாமி சரணடைய முடிவு செய்துள்ளார். அதிலும், கோர்ட்டில் சரணடைந்தால், மீண்டும் போலீசார் கஸ்டடியில் எடுத்து, கடுமையாக விசாரிப்பர்; விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தால், வழக்கு விசாரணையின் போது, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு அமையும் என்பதால், எஸ்.பி., அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த பி.ஆர்.பி.,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பின்னத்தேவர் மகன் பி.பழனிச்சாமி,60. இவர், முன்பு, பெரியாறு - வைகை பிரதான கால்வாய் பணியின் ஒரு பகுதியின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவரது மனைவி விஜயலட்சுமி. மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மகள் சிவரஞ்சனி.
திருச்சி கல்குவாரி ஒன்றில், கிரானைட் கிடைக்கும் என திருச்சி அரசியல் புள்ளி ஒருவர் தோண்டினார். கிரானைட் கிடைக்கவில்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை பழனிச்சாமி குறைந்த விலைக்கு வாங்கினார். அக்குவாரியில் ஜல்லி, உடைகல் சேகரிக்க ஆழமாக தோண்டினார். அப்போது விலை மதிக்க முடியாத ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள் தோண்ட, தோண்ட கிடைத்தது. இதனால், "சினிமா பாணியில்' குறுகிய காலத்திலேயே, பழனிச்சாமி மிகப்பெரிய
வளர்ச்சியை கண்டார். இவரது பார்வை, மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் திரும்பியது. இங்கு விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கினார். இவரது கைராசி தோண்டும் இடமெல்லாம் கிரானைட் கற்கள் குவியல், குவியலாக கிடைத்தது. ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்களை, அழகாய் செதுக்கி ஏற்றுமதி செய்யத் துவங்கினார். அசுர வளர்ச்சி கண்டது இவரது நிறுவனம். "பழனிச்சாமி' "பி.ஆர்.பி.,' ஆனார். தனது கிரானைட் நிறுவனங்களுக்கு "பி.ஆர்.பி., கிரானைட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்' என பெயரிட்டார். தலைமை அலுவலகத்தை மதுரை - மேலூர் ரோடு தெற்குத்தெருவில் நிறுவினார். 1990ம் ஆண்டில் இருந்து பி.ஆர்.பி.,யின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தது.
கிரானைட் உலகின் "முடிசூடா மன்னன்', "கிரானைட் கிங்' என அழைக்கப்பட்டார். அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்குடன், தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். இவரைத் தேடிச்சென்று "தேர்தல் நிதி' பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிகம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆதரவுக்கரம் நீட்டுவார். சிறந்த ஏற்றுமதி நிறுவனத்திற்கான ஜனாதிபதி விருதுகள் பி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டன. பி.ஆர்.பி.,யின் கிரானைட் நிறுவனங்களின் வளர்ச்சி "அசுர வேகம்' கண்டது. கிரானைட் தவிர போக்குவரத்து துறையிலும், பி.ஆர்.பி., தடம் பதித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி வழித்தடங்களில் பி.ஆர்.பி., பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன.
வழித்தட (ரூட் பெர்மிஷன்) அனுமதியுடன் விற்பனைக்கு வரும் பஸ்களை வாங்குவது, பி.ஆர்.பி.,யின் ஸ்டைல். இந்தியாவின், பல்வேறு விமானநிலையங்களில் பி.ஆர்.பி.,யின் கிரானைட்கள் அலங்கரிக்கின்றன. அமெரிக்க வெள்ளைமாளிகை புதுப்பிக்கப்பட்டபோது, இங்கிருந்து முதல்தர ஏற்றுமதி கிரானைட் கற்களை அமெரிக்காவிற்கு பி.ஆர்.பி., ஏற்றுமதி செய்தார் என்று அவரைப்பற்றி பெருமைப்படுகின்றனர் நிறுவன ஊழியர்கள். வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை கொண்டு செல்ல, சொந்தமாக சரக்கு கப்பல் வாங்க திட்டமிட்டார். ""நேரம் சரியில்லை. தற்போது புதிய முதலீடு வேண்டாம்,'' என ஜோதிடர் அட்வைஸ் செய்ததால், கப்பல் வாங்கும் முயற்சியை சமீபத்தில் கைவிட்டாராம்.