நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
19/8/2012, 4:53 am
மறைமலைநகர் : கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியில் பழுதடைந்த மின் மாற்றியை, இரண்டு நாட்களாக சரி செய்யாத மின்வாரியத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள், அதிக போக்குவரத்து கொண்ட நெல்லிகுப்பம் சாலையில், நான்கு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மின்மாற்றி பழுதுநந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, ஆறாவது வார்டுக்குட்பட்டது பெரியார் நகர். இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மின் மாற்றி, இரண்டு நாட்களுக்கு முன் பழுதானது. மின்வாரிய அதிகாரிகள், நேற்று காலை பழுதான மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின் மாற்றியை பொருத்தினர். சிறிது நேரத்தில், புதிய மின் மாற்றியும் பழுதானது. பொது மக்கள் மின்வாரியத்தில் புகார் செய்தனர்.

அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இரவு, 7 மணிவரை மின்தடை தொடர்ந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நெல்லிகுப்பம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் (பொறுப்பு) தலைமையில், வந்த இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள், மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், ""மின்வாரிய அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம்'', என மக்கள் கூறிவிட்டனர் . அதிகாரிகள் அடம் நள்ளிரவு, 11 மணி வரை மின்வாரிய அதிகாரிகள் நேரில் வராததால், நான்கு மணி நேரம் போராட்டம் தொடர்ந்தது.

இருபுறமும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால், 5 கி.மீ., தூரத்திற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பணி முடித்து கிராமங்களுக்கு திரும்பியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து, சமாதானப்படுத்தாமல் அடம் பிடித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் அலைபேசியில், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அவர்கள் தற்காலிகமாக, சில பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, மக்கள் இரவு, 11.30 மணிக்கு, மறியலை கைவிட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

"இப்பகுதியில், கடந்த மூன்று நாட்களாக தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொசுத் தொல்லை, புழுக்கத்தால் தூங்க முடியவில்லை. பணிக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், முறையான பதில் அளிப்பதில்லை,'' என்றனர்.

Message reputation : 100% (1 vote)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

தொடர் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் ஆவேசம்

From எழுத்ததிகாரன்

Topic ID: 275

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...