கொல்கத்தா: உடலில் நீண்டநேரம் நறுமணமும், புத்துணர்ச்சியும் அளிக்கும் ஆண்களுக்கான வாசனை திரவியத்திற்கு விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. சிறந்த பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான டோணி, கிரிக்கெட் ஆடுகளத்தில் பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துளளார். இதன் மூலம் சர்வதேச அளவில் டோணிக்கு ரசிகர்கள் உண்டு.
இதனால் பல விளம்பரங்களில் தோன்றும் டோணி, அதிக வருமானம் பெற்று வருகிறார். இந்த நிலையில் உடலில் நீண்ட நேரம் நறுமணமும், புத்துணர்ச்சியும் தர கூடிய ஆண்களுக்கான வாசனை திரவியம் விற்பனைக்கு டோணி விளம்பர தூதராக தோன்ற உள்ளார். இதற்காக துபாய் நிறுவனத்துடன், டோணி ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே முதல் முறையாக வாசனை திராவியத்திற்கு விளம்பர தூதராக தோன்றும் முதல் கிரிக்கெட் வீரர் டோணி தான். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரின் போது, வாசனை திராவியம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக உலகின் மற்ற நாடுகளுக்கு வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து டோணி கூறியதாவது,
நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தை விரும்பும் மக்களுக்கு, நான் அறிமுகப்படுத்தும் வாசனை திராவியத்தை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். மேலும் சர்வதேச அளவிலான தரத்துடன் இந்த வாசனை திராவியம் தயாரிக்கப்பட உள்ளது என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. சிறந்த பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான டோணி, கிரிக்கெட் ஆடுகளத்தில் பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துளளார். இதன் மூலம் சர்வதேச அளவில் டோணிக்கு ரசிகர்கள் உண்டு.
இதனால் பல விளம்பரங்களில் தோன்றும் டோணி, அதிக வருமானம் பெற்று வருகிறார். இந்த நிலையில் உடலில் நீண்ட நேரம் நறுமணமும், புத்துணர்ச்சியும் தர கூடிய ஆண்களுக்கான வாசனை திரவியம் விற்பனைக்கு டோணி விளம்பர தூதராக தோன்ற உள்ளார். இதற்காக துபாய் நிறுவனத்துடன், டோணி ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே முதல் முறையாக வாசனை திராவியத்திற்கு விளம்பர தூதராக தோன்றும் முதல் கிரிக்கெட் வீரர் டோணி தான். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரின் போது, வாசனை திராவியம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக உலகின் மற்ற நாடுகளுக்கு வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து டோணி கூறியதாவது,
நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தை விரும்பும் மக்களுக்கு, நான் அறிமுகப்படுத்தும் வாசனை திராவியத்தை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். மேலும் சர்வதேச அளவிலான தரத்துடன் இந்த வாசனை திராவியம் தயாரிக்கப்பட உள்ளது என்றார்.