Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 3:39 am
ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த விதிமுறைகள் வருமா? Share_10
தனியார் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிமுறைகளை வகுப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில், தமிழகம் முழுவதும், விதியே இல்லாமல் கண்டபடி இயக்கப்படும், "ஷேர் ஆட்டோ'க்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெட்ரோல், வாகன காஸ் விலை உயர்வின் காரணமாக, ஆட்டோ கட்டணங்கள் சரமாரியாக உயர்ந்து வந்த நிலையில் தான், ஷேர் ஆட்டோக்கள் தமிழகத்தில் அறிமுகமாயின. கடந்த, ஏப்ரல் மாதம் நிலவரப்படி, தமிழக சாலைகளில், பயணிக்கும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை, 1.54 கோடியைத் தாண்டியுள்ளது.

கட்டணம்: இதில், ஆட்டோக்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதில், ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கையும், கணிசமான அளவு உள்ளது. இது தவிர, டாடா மாஜிக், மகேந்திரா மேக்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. "ஷேர்' ஆட்டோக்கள், டாடா மேஜிக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகளிடம், பயண தூரத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பஸ் டிக்கெட் கட்டணத்தை விட சற்றே அதிகம். ஆனால், ஷேர் ஆட்டோக்களை அதிகளவில்

அறிமுகப்படுத்தியுள்ள, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ஆட்டோக்களில், சாதாரண ஆட்டோக்களை போல் மூன்று பேர் தான் பயணிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்த ஆட்டோக்களில் உள்புறம் ஆறு பேர், டிரைவரின் இருபுறமும், இரண்டு பேர் என டிரைவருடன் சேர்த்து, ஒன்பது பேர் பயணிக்கின்றனர். இதனால், இது போன்ற ஷேர் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகும் போது, உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் போது, திருப்பங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் உண்டு. குழந்தைகள்: அதிக ஆட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பதாலும், டீசலில் செலுத்தப்படுவதாலும், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில், தங்களிடம் இருந்த சாதாரண ஆட்டோக்களைவிற்பனை செய்துவிட்டு, "ஷேர்' ஆட்டோக்களை வாங்கி ஓட்டி வருகின்றனர். இவர்கள், தங்கள் பகுதியில் இருந்து, பள்ளி மாணவர்களை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் பணியை மேற்கொள்கின்றனர். இதில், சாதாரணமாக பயணிகள் எட்டு பேரை ஏற்றினால், பள்ளிக் குழந்தைகளை, 13 பேர் வரை ஏற்றி, புளி மூட்டை போல் அடைத்துச் செல்கின்றனர். சாதாரண ஆட்டோக்களிலும் இது போன்று, பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏற்றிச்

செல்வதும் உண்டு. ஷேர் ஆட்டோக்களில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, குறுகலான சாலைகளில் கூட தங்கள் இஷ்டத்திற்கு ஓட்டுகின்றனர். சென்னையில் மட்டும் தற்போது, 66 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில், 30லிருந்து 35 சதவீதம் ஷேர் ஆட்டோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஷேர் ஆட்டோக் களின் இந்த அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதம்: சென்னை சேலையூரில், பள்ளி பஸ் விபத்தில் குழந்தை பலியான சம்பவத்திற்கு பின்பு தான், தமிழக அரசு விழித்துக் கொண்டுள்ளது.

இப்போது, அதிக பயணிககள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை கூட விடாமல், பிடித்து அபராதம் விதித்து, டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதை பார்க்க முடிகிறது. பள்ளி பஸ்சில் குழந்தை பலியான விவகாரத்தில், தலையிட்ட ஐகோர்ட், பள்ளி பஸ்களுக்கு புதிய சட்ட விதிகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதே போல், அடாவடியாக இயக்கப்பட்டு வரும், இந்த ஷேர் ஆட்டோக்களுக்கும் தனியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு. விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை என்ற நிலை மாறி, வருமுன் காக்கும் நடவடிக்கையாக இதை செய்ய வேண்டும் என்று, அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

-Thinamalar

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த விதிமுறைகள் வருமா?

From எழுத்ததிகாரன்

Topic ID: 67

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...