Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
29/7/2012, 5:17 pm
சென்னை: தமிழக அரசில் அமைச்சர்கள் மட்டுமில்லாமல், பல வித காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டு வருவதால், அதிகாரிகள் மத்தியில், ஒரு வித அச்சம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து விட்டாலே, அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. கடந்தாண்டு மே மாதம் முதல் இதுவரை, ஆறு முறை அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனை நீக்கிவிட்டு, தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக மாற்றப்பட்டார்.

அதிரடி மாற்றம்: ஒரு புறம் அமைச்சர்கள் என்றால், மற்றொரு புறம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். ஆட்சி அமைந்ததில் இருந்து, இதுவரை ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் என்பது 100க்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து, 18ம் தேதி வரை, ஒன்பது முறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, துறையின் செயலர்கள், மாவட்டக் கலெக்டர்கள் மாற்றம், அனைத்து அதிகாரிகளுக்கும் மனதளவில் கிலியை உண்டாக்கியுள்ளது. மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம், விருதுநகர் கலெக்டராக இருந்த பாலாஜி ஆகியோர் மாற்றப்பட்டனர். இதில், சகாயம் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பாலாஜிக்கு இதுவரை எந்த பதவியும் வழங்காமல், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதில், பாலாஜி மாற்றத்திற்கான காரணம், ஆளுங்கட்சி பிரமுகரின் பரிந்துரையை ஏற்காததா அல்லது மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பேச்சை கேட்க மறுத்ததா? என்ற விவாதம் கோட்டையில் எதிரொலித்து வருகிறது.

அதிகாரிகள் அதிர்ச்சி: இதற்கிடையில், கடந்த வாரத்தில் திடீரென ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். வருவாய்த்துறைச் செயலராக இருந்த ரமேஷ்ராம் மிஸ்ரா, சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்டார். வருவாய் நிர்வாகத் துறை கமிஷனராக இருந்த ஞானதேசிகன், வருவாய்த் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத் துறைச் செயலர் ஜெயக்கொடி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும், சுற்றுலாத் துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனராகவும், அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனர் ஹேமந்த் குமார் சின்கா, சுற்றுலாத் துறை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டனர். திடீரென யாரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த அதிரடி மாற்றம், பின்னணியில் இருந்தவர்களைத் தவிர, மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான அதிகாரிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அடிக்கடி பந்தாடப்படுகின்றனர். ஒரு ஆண்டில் பல பொறுப்புகளில் முக்கிய அதிகாரிகள் இவ்வாறு நியமிக்கப்பட்டால், நிர்வாகம் எப்படி சிறப்பாக அமையும் என்பது அதிகாரிகளின் கேள்வியாக உள்ளது.

நிர்வாகத்தில் பாதிப்பு: "நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை மாற்றுவதை குறை கூற முடியாது' என்று அரசின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட, தற்போது மானம் மாறி, அடிக்கடி அதிகாரிகள் மாற்றுவதால் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற கூறத் துவங்கியுள்ளனர். "நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், எந்த பணி கொடுத்தாலும் அதனை தங்கள் பாணியில் செய்வதற்கு தயாராக உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அத்தகைய அதிகாரிகள் பல்வேறு துறைகளுகளுக்கு மாறுதலாவதன் மூலம், அந்தந்த துறைகள் சுத்தமடையும். ஆனால், அவர்களின் அதிரடி இட மாறுதல்களுகளுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது' என்றார் மூத்த அதிகாரி ஒருவர். காரணம் அறியாமல், அதிகாரிகள் பந்தாடப்படுதவால், அவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உத்வேகத்துடன் பணிகளை மேற்கொண்டவர்கள், தங்களது வேகத்தை குறைத்துக் கொண்டு, எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தோடு பணி செய்யத் துவங்கியுள்ளனர். இதற்கிடையில், இன்னும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் மாறுதல் பட்டியல், முதல்வர் கையில் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

அரசின் அதிரடிக்கு அதிகாரிகளும் தப்பவில்லை

From எழுத்ததிகாரன்

Topic ID: 64

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...