கோவை;"" திரைப்படங்களை பார்ப்பது கழிவறைக்கு சென்று வருவது போல, மனதை கழுவி விட்டு வரவேண்டும்'' என, பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசினார்.
சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் நெறிமுறைப்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அண்ணாதுரை வரவேற்றார். நெல்லை கண்ணன் பேசியதாவது:கல்லூரி வாழ்க்கையில், சுயக்கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும். "டிவி', திரைப்படங்களில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். திரைப்படங்களை பார்ப்பது, கழிவறைக்கு சென்று வருவது போல, மனதை கழுவி விட்டு வரவேண்டும்.
தாய் மொழி, பெற்றோர் மற்றும் ஆசிரியரை மதிக்க வேண்டும்.கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. அனைவரிடமும் அன்பு செலுத்தி, ஜாதி, மதம், இனம் பேதமின்றி பழக வேண்டும்.பிற மொழிகளை கற்க வேண்டும்.ஒவ்வொருவரிடமும், தனித்திறமை உள்ளது. அதனை வெளிக்கொணரும் விதத்தில், ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.புதிய மாணவர்களுக்கு, டீன் மற்றும் துறைத்தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மாணவர் ஸ்ரீநந்தன் நன்றி கூறினார்.
சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் நெறிமுறைப்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அண்ணாதுரை வரவேற்றார். நெல்லை கண்ணன் பேசியதாவது:கல்லூரி வாழ்க்கையில், சுயக்கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும். "டிவி', திரைப்படங்களில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். திரைப்படங்களை பார்ப்பது, கழிவறைக்கு சென்று வருவது போல, மனதை கழுவி விட்டு வரவேண்டும்.
தாய் மொழி, பெற்றோர் மற்றும் ஆசிரியரை மதிக்க வேண்டும்.கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. அனைவரிடமும் அன்பு செலுத்தி, ஜாதி, மதம், இனம் பேதமின்றி பழக வேண்டும்.பிற மொழிகளை கற்க வேண்டும்.ஒவ்வொருவரிடமும், தனித்திறமை உள்ளது. அதனை வெளிக்கொணரும் விதத்தில், ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.புதிய மாணவர்களுக்கு, டீன் மற்றும் துறைத்தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மாணவர் ஸ்ரீநந்தன் நன்றி கூறினார்.