திருச்சி: "சிறந்த சேவை புரிந்த பெண்மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். விருது பெற தகுதி வாய்ந்த பெண்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.இதுகுறித்து திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை:சமூக நலத்துறை சார்பில், நடப்பு 2012-2013ம் ஆண்டுக்காக அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினவிழாவில், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த பெண்மணிக்கு, மாநில அளவில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு மட்டும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் விருது வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 8 கிராம் மதிப்புள்ள தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். இவ்விருத்துக்கு விண்ணப்பிக்கும் நபர், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, பெண் குலத்துக்கு பெரு மை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கும் பெண்களுக்கும் தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வர வேண்டும்.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் முகவரி, கல்வித்தகுதி, தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் தற்போது பணிபுரியும் தொண்டு நிறுவன விபரம், மகளிர் முன்னேற்றத்துக்காக பணிபுரிந்த ஆண்டுகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஆற்றிய சேவைகளின் விபரங்கள் ஆகியவற்றுடன் கையேடுகள் மூன்று பிரதிகளை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்."மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சி' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0431-2413796 என்ற ஃபோன் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 8 கிராம் மதிப்புள்ள தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். இவ்விருத்துக்கு விண்ணப்பிக்கும் நபர், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, பெண் குலத்துக்கு பெரு மை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கும் பெண்களுக்கும் தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வர வேண்டும்.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் முகவரி, கல்வித்தகுதி, தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் தற்போது பணிபுரியும் தொண்டு நிறுவன விபரம், மகளிர் முன்னேற்றத்துக்காக பணிபுரிந்த ஆண்டுகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஆற்றிய சேவைகளின் விபரங்கள் ஆகியவற்றுடன் கையேடுகள் மூன்று பிரதிகளை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்."மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சி' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0431-2413796 என்ற ஃபோன் எண்ணை தொடர்பு கொள்ளவும்.