சென்னை: திமுகவை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இதைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக வலுப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
திருவேங்கடம், கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், ராதாகிருஷ்ணன், சச்சிதானந்தம், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் திமுகவில் மிகப் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இதைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக வலுப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
திருவேங்கடம், கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், ராதாகிருஷ்ணன், சச்சிதானந்தம், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் திமுகவில் மிகப் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடும் எனத் தெரிகிறது.