சென்னை: அரசியல் பிரவேசத்துக்காக நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் செயலி வரும் ஜனவரி மாதம்தான் வெளியிடப்படும் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார். நடிகர் கமல் ஹாஸன் தனது 63வது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்த செயலிக்கு மய்யம்விசில் #maiamwhistle என்று பெயர் வைத்திருக்கிறோம். விசில் ஒரு பெரிய ஆயுதம்தான். உலகெங்கும் அநியாயத்தை எதிர்த்து விசில் எழுப்புவர்களை விசில் புளோயர் என்கிறோம்.
நானே தவறு செய்தால் கூட இந்த செயலியில் நீங்கள் விசில் எழுப்பலாம்.
மையம் விசில் இப்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. அதன் பீட்டா வெர்ஷன் தயாராக உள்ளது. முழுமையாகத் தயாராக ஜனவரி ஆகும். அதற்குள் புதிய இணைப்புகள், சேவை வழிகளை சேர்க்க வேண்டியுள்ளது," என்றார் கமல் ஹாஸன்.
இப்போதைக்கு செயலி மட்டும்தான் என்றும், அதிலேயே எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நானே தவறு செய்தால் கூட இந்த செயலியில் நீங்கள் விசில் எழுப்பலாம்.
மையம் விசில் இப்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. அதன் பீட்டா வெர்ஷன் தயாராக உள்ளது. முழுமையாகத் தயாராக ஜனவரி ஆகும். அதற்குள் புதிய இணைப்புகள், சேவை வழிகளை சேர்க்க வேண்டியுள்ளது," என்றார் கமல் ஹாஸன்.
இப்போதைக்கு செயலி மட்டும்தான் என்றும், அதிலேயே எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.