Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
10/11/2016, 2:12 am
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் "ரீமிக்ஸ்"ஐ கையாளலாம்!

ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ஆட்டைக் கொடுத்து அரிசியையும் பரிவர்த்தனை செய்துகொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இதுதான் இந்தியாவின் ஆரம்பநிலை "பணவியல் பொருளாதாரம்".  அதன் பிறகு மனிதர்கள் தொலைதூரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கியதால் ஆடு, மாடுகளை தூக்கிச் செல்வதில் சிரமமும், சிக்கலும் ஏற்பட்டதால் இந்த சிக்கலில் இருந்து விடுபடவே பணம் என்ற ஒன்றை கையாளத் தொடங்கினார்கள்.

எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், மக்கள் முற்றிலுமாக பணத்தை வெறுத்து மீண்டும் ஆரம்ப காலத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. நாட்டின் சில இடங்களில் பத்திரத்தாள்கள் மூலம் மக்கள் பண நெருக்கடியை சமாளிக்க முடிவு செய்து ஆரம்ப காலத்திற்கு மீண்டும் செல்லும் வழியைப் பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் பணம் என்ற ஒரு "புராப்பர்ட்டி"யே இல்லாமலும் போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது!!

எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், அதன் பிறகு எந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தாலும் "எங்களுக்கு பணமே வேண்டாம், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை விட்டு விடுங்கள்!" என்று சொல்லி பழைய பரிவர்த்தனை முறையை மீண்டும் "ரீமிக்ஸ்" செய்தாலும் செய்யலாம்.!! இதன் மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், அண்டர்கிரவுண்ட் தாதாக்கள், கறுப்புப்பண முதலைகள், கள்ளப்பணம் தயாரிப்பவர்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டலாம்!!

இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்! அல்லது மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்.!

அதாவது, மக்களின் நலனுக்காக பல செயல்களை திட்டமிட்டு செய்யும்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டு அதனால் கெட்டவன், அயோக்கியன், மோசமானவன், அவன், இவன், தகாதவன் என்றெல்லாம் விமர்சிக்கப்படும் ஒரு ஹீரோ, கடைசியில் தான் செய்ததெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்பதை புரிய வைக்கும்போது அவனை சூப்பர் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது திரைப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில், ஒரு நாட்டின் பல அதிகாரங்கள் உள்ள மத்திய அரசு இதை செய்யலாமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும், இதைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். இதற்காகத்தான் முன்னறிவிப்பில்லாமல் அதிரடியாக பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, யாருக்கும் பிடிக்காத தகாதவனாக தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்! இன்னும் 50 நாட்களுக்குப் பிறகு, தான் செய்த செயலுக்கான காரணத்தை விளக்கி சொல்லி மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக திகழ்வார்! என்பதில் சந்தேகமே இல்லை.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய வடிவில் வெளியிட்ட பிரதமர் மோடி அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதாகத்தான் இருக்கிறது. இது மிகவும் சரியான தீர்வாக இருந்தாலும் கூட, பணம் இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டுமானால் அதில் பலவிதமான சிக்கல்களும், இழப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்புகளும் இருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை தடை செய்து மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, இடைவேளை வரையிலான ஒரு சினிமாவை மத்திய அரசு மக்களுக்கு காட்டியிருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் வரும்? அதெல்லாம் எப்படி தீர்க்க வேண்டும்? என்பது பற்றி மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா? அல்லது தொடர்ந்து கருப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அவையெல்லாம் இன்டர்நெட்டில் எழுதப்படவில்லை!!

இந்தியாவில் கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டுமானால் பணம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதுதான் கான்செப்ட்! ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது?... அதுதான் ஹைலைட்டு!

அந்த பிரச்சினைகள் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதைப்பற்றி தொடர்ந்து அலசலாம். அதன் பிறகு பண பரிவர்த்தனையை டிஜிட்டல்-ல பண்ணினாலும் சரி, DTS ல பண்ணினாலும் சரி. நாங்கள் வரவேற்கிறோம்!!

துணிச்சல் நாயகளின் டிஜிட்டல் இந்தியா! திட்டம் வெற்றிபெற உறுதுணையாக செயல்படுவோம்!!

இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Thagaa10

நாட்டில் பல தவறுகளுக்கு காரணமாக இருப்பது ஆட்சியாளர்களின் கையில் காவல்துறை செயல்படுவதுதான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றி பந்தாடுவதைத்தான் முதலில் செய்கின்றன.

அரசியல்வாதிகளுக்கு கீழே காவல்துறை செயல்படுவதால்தான் குற்றவாளிகளை முட்டிக்கு கீழே சுடவேண்டும் என்று கட்டிப்போடுகிறார்கள். எனவே காவல்துறையை தனி அரசாங்கமாக அறிவிக்க வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளும் தங்களுடைய கடமையை சரிவர செய்வார்கள். அதன் பிறகு குற்றவாளிகளையும், குண்டு வைப்பவர்களையும் நெத்திப் பொட்டில் சுடுவார்கள்!! சட்டமும் ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தியா வல்லரசாகும்!

Message reputation : 100% (18 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!

From எழுத்ததிகாரன்

Topic ID: 810

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...