நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று அருகில் இருக்கும் மருத்துவரிடம் தகவல் சொல்லி அழைத்து வந்து மருத்துவம் பார்ப்போம். அதன் பிறகு யார் வீட்டிலாவது தொலைபேசி இருந்தால் அதன் மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு வரவைத்து மருத்துவம் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்திலெல்லாம் பேமிலி டாக்டர்கள் என்று ஒருசில குடும்பங்கள் தங்களுக்கென்று ஒரு மருத்துவரை அணுகுவார்கள். அவர்களும் ஆபத்து நேரங்களில் வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்ப்பார்கள்.
ஆனால், இன்று எவ்வளவு அவசர நிலையாக இருந்தாலும் மருத்துவர்கள் யாரும் வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைக்கே போனாலும் கூட மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இருப்பதில்லை. 10 ஆம் வகுப்பு படித்த ஆண்களும், பெண்களும்தான் ஊசி போடுகிறார்கள், ரத்தம் பரிசோதிக்கிறார்கள், மருந்தும் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவசர நிலையில் ICU-வில் வைத்து மருத்துவம் பார்க்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரையில் படுக்கைக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். பல மருத்துவமனைகளில் இதற்காகவே தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கிறார்கள்.
இதைவிட கொடுமை என்னவென்றால்? மருத்துவ செலவை விட, மருத்துவ பரிசோதனைக்குத்தான் மிகவும் அதிகமாக செலவு செய்ய நேரிடுகிறது. வசதியற்ற ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் கூட அங்கு போதிய வசதிகள் இல்லை என்றும், குறிப்பிட்ட சில பரிசோதனைகள் தனியார் மருத்துவமனைகளில்தான் இருக்கிறதென்றும் சொல்லி பலரையும் தனியார் மருத்துவமனைகளுக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் "பரிசோதனைகள் இலவசம்" என்பதை சட்டமாக்க வேண்டும்! அல்லது அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனைகளை இயக்க வேண்டும். எனவே, பிரதமர் மோடியின் மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழித்து அந்தப் பணத்தின் மூலம் மக்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தித்தருமா? என்று மக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கருப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து ஒழிப்பதற்காகத்தான் என்று வைத்துக்கொண்டால், புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வியை பலரும் முன் வைக்கிறார்கள். ஒரு சிலரோ அதிமேதாவிகளைப்போல எந்த விவரமும் தெரியாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல் மத்திய அரசின் செயலை வரவேற்பதாகவும், எல்லாம் தெரிந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே கருப்புப்பணத்தை ஒழிப்பதுதான் மோடியின் திட்டமாக இருந்தால், புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டதற்கு அதுதான் காரணம் என்பதை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மேலும், மக்களை பழைய ரூபாய் நோட்டுக்குக்களை முதலில் வங்கியில் டெப்பாசிட் செய்துவிட்டு அதன் பிறகு சில நாட்களில் புதிய ரூபாய் நோட்டுக்களாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் பலரும் எந்த தயக்கமும் இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்குக்களை மாற்றுவதற்கு முன் வந்திருப்பார்கள். ஆனால் மத்திய அரசோ "விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்திலை பாக்கை" என்று அதிரடியாக அறிவித்தது மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், புதிய ரூபாய் நோட்டுக்களில் எலக்ட்ரானிக்ஸ் சிக்னல் உள்ள சிப் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதிகமான ரூபாய்களை மாற்றினால் வருமான வரி பிடிக்கப்படும் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பல அறிவிப்புகளை வெளியிட்டு சிலரை பயமுறுத்தி, பலரை பதுங்க வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதாவது, அரசுக்கு வரி கட்டக் கூடாது என்பதற்காகத்தானே அதை பதுக்கி வைத்திருக்கிறார்கள். பின்பு, நான் புதிதாக ரூபாய் நோட்டு வெளியிட்டிருக்கிறேன், உன்னிடமுள்ள கணக்கில் வராத கறுப்புப் பணத்தையெல்லாம் கொண்டு வந்து கொடுத்து மாற்றிவிட்டு எனக்கு வரியை கட்டு. என்று சொன்னால் இது என்ன புத்திசாலித்தனம்? யார் இதை செய்வார்கள்? இதனால்தானே இன்று பலரும் பினாமிகளை பயன்படுத்துகிறார்கள்?. அரசுக்கு வரியாக 50,000 கொடுக்க வேண்டுமானால் பினாமிகளைப் பயன்படுத்தி 10,000 செலவு செய்தால் போதுமே கருப்பு வெள்ளையாகி விடாதா? வரி கட்டாமல் அரசை ஏமாற்றுபவர்கள் புத்திசாலித்தனம் இல்லாமலா ஏமாற்றுகிறார்கள்? இது மத்திய அரசுக்கு தெரிய வேண்டாமா? ஆனால், பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல மத்திய அரசு நடந்து கொள்ளுகிறது.
அதே நேரத்தில் கமிஷனுக்காக பினாமிகளாக செயல்படாதீர்கள் என்று மக்களை தடுக்கிறார்கள். ஆனால், கருப்புப்பணத்தை கையகப்படுத்தி 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். அதாவது "அடிச்சுக் கூட கேப்பாங்க ஆனால், யாருகிட்டயும் சொல்லிடாதே!" என்று சம்மந்தமே இல்லாமல் சொல்வதுபோல பல குழப்பங்களை மேலும் மேலும் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைப் பற்றி இப்போது யார் கேட்டது? நான் எல்லாம் வீடு வாசல் இல்லாமல் ரோட்டுலயா நின்னுகிட்டு இருக்கேன்? என்று மக்கள் பலரும் குமுறுகிறார்கள். நாளைக்கு சாப்பிட அரிசி வாங்க இருக்கும் பணத்தை பயன்படுத்த முடியாம திண்டாடிகிட்டு இருக்கும்போது 2022 ல வீடு தருகிறார்களாம்! என்ன வேடிக்கை இதெல்லாம்?
மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?...
"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை போன்று அதிகமான கள்ள நோட்டுக்கள் நாட்டில் புலங்குகிறது. இதை கண்டுபிடிப்பதும், தடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதனால் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி இன்றைய அறிவியல் டெக்னாலஜியை பயன்படுத்தி புதுவிதமான ரூபாய் நோட்டுக்களை தயாரித்து மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனவே இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்யுங்கள். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கை தொடங்குவதற்கு வசதியாக நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைந்து செயல்படுங்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் டெப்பாசிட் செய்யவில்லையென்றால் உங்களிடமுள்ள பழைய ரூபாய்கள் ஏற்றுக்கொள்ளப்படாது." என்று அறிவித்திருந்தால் புதிய ரூபாய் நோட்டுக்குக்களை பார்க்கவும், பயன்படுத்தவும் மக்கள் ஆர்வத்துடன் எந்தவித தயக்கமும், குழப்பமும், பதட்டமும் இல்லாமல் முன் வந்திருப்பார்கள். அதன்பிறகு புதிய வங்கிக்கணக்கில் அதிகமான ரூபாய்கள் டெப்பாசிட் செய்யப்பட்ட நபர்களிடம் வரி வசூலித்திருக்கலாம். விசாரணை நடத்தியிருக்கலாம், எப்படியெல்லாமோ மிரட்டியிருக்கலாம்.
ஆனால், நான் உன்னை பிடிக்கப் போகிறேன் ஓடிவிடு என்பது போலவும், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இனிமேல் இவர்கள் எப்படி கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இது பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான திட்டமா? அல்லது மக்களை முட்டாள்களாக்கும் திட்டமா? என்பதும் சரியாக விளங்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் மத்திய அரசு இனிமேல் முறையாக கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவந்து, அதை ஒழித்து மக்களுக்கு உதவி செய்யவில்லையென்றால் மத்திய அரசை மக்கள் நம்பமாட்டார்கள்! என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரதமர் மோடியிடம் நேரடியாக விவாதத்தில் பங்குபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!!
இன்னமும் பிரதமர் மோடியின் மத்திய அரசை மக்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை!! ஆரம்பம் எப்படி இருந்தாலும் முடிவு மக்களுக்கு சாதகமாக அமைந்தால் மத்திய அரசுக்கு பலம் கூடும்!!
ஆனால், இன்று எவ்வளவு அவசர நிலையாக இருந்தாலும் மருத்துவர்கள் யாரும் வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைக்கே போனாலும் கூட மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இருப்பதில்லை. 10 ஆம் வகுப்பு படித்த ஆண்களும், பெண்களும்தான் ஊசி போடுகிறார்கள், ரத்தம் பரிசோதிக்கிறார்கள், மருந்தும் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவசர நிலையில் ICU-வில் வைத்து மருத்துவம் பார்க்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரையில் படுக்கைக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். பல மருத்துவமனைகளில் இதற்காகவே தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கிறார்கள்.
இதைவிட கொடுமை என்னவென்றால்? மருத்துவ செலவை விட, மருத்துவ பரிசோதனைக்குத்தான் மிகவும் அதிகமாக செலவு செய்ய நேரிடுகிறது. வசதியற்ற ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் கூட அங்கு போதிய வசதிகள் இல்லை என்றும், குறிப்பிட்ட சில பரிசோதனைகள் தனியார் மருத்துவமனைகளில்தான் இருக்கிறதென்றும் சொல்லி பலரையும் தனியார் மருத்துவமனைகளுக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் "பரிசோதனைகள் இலவசம்" என்பதை சட்டமாக்க வேண்டும்! அல்லது அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனைகளை இயக்க வேண்டும். எனவே, பிரதமர் மோடியின் மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழித்து அந்தப் பணத்தின் மூலம் மக்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தித்தருமா? என்று மக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கருப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து ஒழிப்பதற்காகத்தான் என்று வைத்துக்கொண்டால், புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வியை பலரும் முன் வைக்கிறார்கள். ஒரு சிலரோ அதிமேதாவிகளைப்போல எந்த விவரமும் தெரியாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல் மத்திய அரசின் செயலை வரவேற்பதாகவும், எல்லாம் தெரிந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே கருப்புப்பணத்தை ஒழிப்பதுதான் மோடியின் திட்டமாக இருந்தால், புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டதற்கு அதுதான் காரணம் என்பதை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மேலும், மக்களை பழைய ரூபாய் நோட்டுக்குக்களை முதலில் வங்கியில் டெப்பாசிட் செய்துவிட்டு அதன் பிறகு சில நாட்களில் புதிய ரூபாய் நோட்டுக்களாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் பலரும் எந்த தயக்கமும் இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்குக்களை மாற்றுவதற்கு முன் வந்திருப்பார்கள். ஆனால் மத்திய அரசோ "விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்திலை பாக்கை" என்று அதிரடியாக அறிவித்தது மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், புதிய ரூபாய் நோட்டுக்களில் எலக்ட்ரானிக்ஸ் சிக்னல் உள்ள சிப் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதிகமான ரூபாய்களை மாற்றினால் வருமான வரி பிடிக்கப்படும் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பல அறிவிப்புகளை வெளியிட்டு சிலரை பயமுறுத்தி, பலரை பதுங்க வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதாவது, அரசுக்கு வரி கட்டக் கூடாது என்பதற்காகத்தானே அதை பதுக்கி வைத்திருக்கிறார்கள். பின்பு, நான் புதிதாக ரூபாய் நோட்டு வெளியிட்டிருக்கிறேன், உன்னிடமுள்ள கணக்கில் வராத கறுப்புப் பணத்தையெல்லாம் கொண்டு வந்து கொடுத்து மாற்றிவிட்டு எனக்கு வரியை கட்டு. என்று சொன்னால் இது என்ன புத்திசாலித்தனம்? யார் இதை செய்வார்கள்? இதனால்தானே இன்று பலரும் பினாமிகளை பயன்படுத்துகிறார்கள்?. அரசுக்கு வரியாக 50,000 கொடுக்க வேண்டுமானால் பினாமிகளைப் பயன்படுத்தி 10,000 செலவு செய்தால் போதுமே கருப்பு வெள்ளையாகி விடாதா? வரி கட்டாமல் அரசை ஏமாற்றுபவர்கள் புத்திசாலித்தனம் இல்லாமலா ஏமாற்றுகிறார்கள்? இது மத்திய அரசுக்கு தெரிய வேண்டாமா? ஆனால், பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல மத்திய அரசு நடந்து கொள்ளுகிறது.
அதே நேரத்தில் கமிஷனுக்காக பினாமிகளாக செயல்படாதீர்கள் என்று மக்களை தடுக்கிறார்கள். ஆனால், கருப்புப்பணத்தை கையகப்படுத்தி 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். அதாவது "அடிச்சுக் கூட கேப்பாங்க ஆனால், யாருகிட்டயும் சொல்லிடாதே!" என்று சம்மந்தமே இல்லாமல் சொல்வதுபோல பல குழப்பங்களை மேலும் மேலும் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைப் பற்றி இப்போது யார் கேட்டது? நான் எல்லாம் வீடு வாசல் இல்லாமல் ரோட்டுலயா நின்னுகிட்டு இருக்கேன்? என்று மக்கள் பலரும் குமுறுகிறார்கள். நாளைக்கு சாப்பிட அரிசி வாங்க இருக்கும் பணத்தை பயன்படுத்த முடியாம திண்டாடிகிட்டு இருக்கும்போது 2022 ல வீடு தருகிறார்களாம்! என்ன வேடிக்கை இதெல்லாம்?
மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?...
"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை போன்று அதிகமான கள்ள நோட்டுக்கள் நாட்டில் புலங்குகிறது. இதை கண்டுபிடிப்பதும், தடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதனால் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி இன்றைய அறிவியல் டெக்னாலஜியை பயன்படுத்தி புதுவிதமான ரூபாய் நோட்டுக்களை தயாரித்து மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனவே இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்யுங்கள். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கை தொடங்குவதற்கு வசதியாக நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைந்து செயல்படுங்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் டெப்பாசிட் செய்யவில்லையென்றால் உங்களிடமுள்ள பழைய ரூபாய்கள் ஏற்றுக்கொள்ளப்படாது." என்று அறிவித்திருந்தால் புதிய ரூபாய் நோட்டுக்குக்களை பார்க்கவும், பயன்படுத்தவும் மக்கள் ஆர்வத்துடன் எந்தவித தயக்கமும், குழப்பமும், பதட்டமும் இல்லாமல் முன் வந்திருப்பார்கள். அதன்பிறகு புதிய வங்கிக்கணக்கில் அதிகமான ரூபாய்கள் டெப்பாசிட் செய்யப்பட்ட நபர்களிடம் வரி வசூலித்திருக்கலாம். விசாரணை நடத்தியிருக்கலாம், எப்படியெல்லாமோ மிரட்டியிருக்கலாம்.
ஆனால், நான் உன்னை பிடிக்கப் போகிறேன் ஓடிவிடு என்பது போலவும், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இனிமேல் இவர்கள் எப்படி கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இது பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான திட்டமா? அல்லது மக்களை முட்டாள்களாக்கும் திட்டமா? என்பதும் சரியாக விளங்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் மத்திய அரசு இனிமேல் முறையாக கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவந்து, அதை ஒழித்து மக்களுக்கு உதவி செய்யவில்லையென்றால் மத்திய அரசை மக்கள் நம்பமாட்டார்கள்! என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரதமர் மோடியிடம் நேரடியாக விவாதத்தில் பங்குபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!!
இன்னமும் பிரதமர் மோடியின் மத்திய அரசை மக்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை!! ஆரம்பம் எப்படி இருந்தாலும் முடிவு மக்களுக்கு சாதகமாக அமைந்தால் மத்திய அரசுக்கு பலம் கூடும்!!