இரண்டரை லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெப்பாசிட் செய்தால் 200% அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது அரசுக்கு வரி கட்டக்கூடாது என்பதற்காகத்தானே கணக்கு காட்டாமல் பணத்தை எல்லாம் சிலர் பதுக்கி வைக்கிறார்கள். ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திவிட்டு அந்தப் பணத்தை மாற்றவேண்டுமானால் அரசுக்கு அபராதம் கட்டணும்னு சொன்னா இது வேடிக்கையாக இல்லையா?
குறைந்த தொகையான வரியே கட்டமாட்டேன்னு சொல்லி பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் 200% அபராதத்தை எப்படி கொண்டுவந்து கொடுப்பார்கள்? பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை கண்டெயினர்களோடு விட்டுட்டு போன சம்பவம் சமீபத்தில்தானே நடந்தது.? இதெல்லாம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், வருமான வரித்துறையினருக்கும் தெரியுமா? தெரியாதா?
வருமானத்திற்கு அதிகமான பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்தால் 200% அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தால் அவர்கள் எப்படி அரசின் உத்தரவை மதித்து உடனே தங்கள் பணத்தையெல்லாம் கொண்டு வந்து காட்டுவார்கள்?... நான் உன்னைப் பிடிப்பதற்காக வலை விரித்திருக்கிறேன்... அதில் நீ வந்து மாட்டிக்க என்று சொன்னால் எவன் வருவான்? இது என்ன புத்திசாலித்தனமான அறிவிப்பு? மத்திய அரசுக்கு பினாமிகள் பற்றி தெரியுமா தெரியாதா? குற்றவாளின்னு சொல்லி 200% அபராதம் கட்டுறதுக்குப் பதிலா பினாமிகளுக்கு சில ஆயிரங்களை கொடுத்தால் போதுமே... கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிடாதா?
ஏற்கெனவே பலபேரு பினாமிகள் பெயரில்தான் சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இந்த லட்சணத்துல கவர்மெண்டே பினாமிகளை உருவாக்கிக்கொள்ள வழி சொல்லிக் கொடுக்கிறது. என்னங்க சார் உங்க சட்டம்?... அப்படின்னு "ஜோக்கர்" படத்துல பாடுன பாட்டை இப்ப சத்தம் போட்டு பாடணும்னு தோணுது.
ஒருத்தன்கிட்ட இருக்கும் வருமானத்திற்கு அதிகமான பணத்தை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வருவதற்கு இதுதான் ரகசிய திட்டமா? இதுக்குத்தான் யாருக்கும் தெரியாம புதிய ரூபாய் நோட்டுகளை தயாரித்தார்களா? இதற்குத்தான் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்களா? ரகசியமா செய்ய வேண்டிய வேலைகளை மத்திய அரசு ஏன் இப்படி பகிரங்கமாக அறிவிக்கிறது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை பிளாமிகளின் பெயரில் வங்கியில் பல கணக்குகளைத் தொடங்க வைத்து, அதன் மூலம் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் வங்கிகளுக்கு வருமானத்தை அதிகரிக்க திட்டம் நடக்கிறதா? அல்லது அந்தப் பணத்தையெல்லாம் தனியார் வங்கிகளின் மூலம் அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதிப்பதற்கு வழி தேடுகிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது?
இனிமேல் டெப்பாசிட் செஞ்சா 200% அபராதம் வசூலிக்கப்படும் சரி. ஆனால், ஏற்கெனவே வெளிநாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்ட கறுப்புப் பணத்திற்கு எப்படி அபராதம் வசூலிப்பார்கள்? எவ்வளவு வரி வசூலிப்பார்கள்? அதை எப்படி வெளிக்கொண்டு வருவார்கள்? என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்.!!
இந்த அதிரடியான அறிவிப்பு என்பது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையா? இல்லை. கறுப்புப் பணத்தில் பங்கு கேட்பதற்கான நடவடிக்கையா? என்பது இந்திய மக்களின் மனதில் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.
வங்கியில் சேமிக்க முடியாத அளவுக்கு மீறிய பணத்தைதான் சிலர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். எனவே, அரசு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வெளியிட்டவுடன். தங்களிடமுள்ள பணத்தை கொண்டுவந்து கொடுத்து "எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல" என்று சொல்லி யாரும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒருவேளை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த ரூபாய் நோட்டு மாற்றம் என்பதை அரசு தெரிவிக்காமல் இருந்தால் இப்படி நடந்திருக்கலாம். ஆனால், அரசு எல்லா ரகசியத்தையும் அடுக்கடுக்காக வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் சுதாரித்துக் கொண்டே வருகிறார்கள்.
இனிமேல் இவர்கள் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்கள் என்பதும் விளங்கவில்லை.
எனக்கு இது சரியா படலை! டைரக்ட்டர் சங்கர்கிட்ட சொல்லி ஆபீஸ் ரூம் போட்டே ஆகணும்! ஆங்!!
அதாவது அரசுக்கு வரி கட்டக்கூடாது என்பதற்காகத்தானே கணக்கு காட்டாமல் பணத்தை எல்லாம் சிலர் பதுக்கி வைக்கிறார்கள். ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திவிட்டு அந்தப் பணத்தை மாற்றவேண்டுமானால் அரசுக்கு அபராதம் கட்டணும்னு சொன்னா இது வேடிக்கையாக இல்லையா?
குறைந்த தொகையான வரியே கட்டமாட்டேன்னு சொல்லி பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் 200% அபராதத்தை எப்படி கொண்டுவந்து கொடுப்பார்கள்? பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை கண்டெயினர்களோடு விட்டுட்டு போன சம்பவம் சமீபத்தில்தானே நடந்தது.? இதெல்லாம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், வருமான வரித்துறையினருக்கும் தெரியுமா? தெரியாதா?
வருமானத்திற்கு அதிகமான பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்தால் 200% அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தால் அவர்கள் எப்படி அரசின் உத்தரவை மதித்து உடனே தங்கள் பணத்தையெல்லாம் கொண்டு வந்து காட்டுவார்கள்?... நான் உன்னைப் பிடிப்பதற்காக வலை விரித்திருக்கிறேன்... அதில் நீ வந்து மாட்டிக்க என்று சொன்னால் எவன் வருவான்? இது என்ன புத்திசாலித்தனமான அறிவிப்பு? மத்திய அரசுக்கு பினாமிகள் பற்றி தெரியுமா தெரியாதா? குற்றவாளின்னு சொல்லி 200% அபராதம் கட்டுறதுக்குப் பதிலா பினாமிகளுக்கு சில ஆயிரங்களை கொடுத்தால் போதுமே... கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிடாதா?
ஏற்கெனவே பலபேரு பினாமிகள் பெயரில்தான் சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இந்த லட்சணத்துல கவர்மெண்டே பினாமிகளை உருவாக்கிக்கொள்ள வழி சொல்லிக் கொடுக்கிறது. என்னங்க சார் உங்க சட்டம்?... அப்படின்னு "ஜோக்கர்" படத்துல பாடுன பாட்டை இப்ப சத்தம் போட்டு பாடணும்னு தோணுது.
ஒருத்தன்கிட்ட இருக்கும் வருமானத்திற்கு அதிகமான பணத்தை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வருவதற்கு இதுதான் ரகசிய திட்டமா? இதுக்குத்தான் யாருக்கும் தெரியாம புதிய ரூபாய் நோட்டுகளை தயாரித்தார்களா? இதற்குத்தான் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்களா? ரகசியமா செய்ய வேண்டிய வேலைகளை மத்திய அரசு ஏன் இப்படி பகிரங்கமாக அறிவிக்கிறது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை பிளாமிகளின் பெயரில் வங்கியில் பல கணக்குகளைத் தொடங்க வைத்து, அதன் மூலம் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் வங்கிகளுக்கு வருமானத்தை அதிகரிக்க திட்டம் நடக்கிறதா? அல்லது அந்தப் பணத்தையெல்லாம் தனியார் வங்கிகளின் மூலம் அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதிப்பதற்கு வழி தேடுகிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது?
இனிமேல் டெப்பாசிட் செஞ்சா 200% அபராதம் வசூலிக்கப்படும் சரி. ஆனால், ஏற்கெனவே வெளிநாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்ட கறுப்புப் பணத்திற்கு எப்படி அபராதம் வசூலிப்பார்கள்? எவ்வளவு வரி வசூலிப்பார்கள்? அதை எப்படி வெளிக்கொண்டு வருவார்கள்? என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்.!!
இந்த அதிரடியான அறிவிப்பு என்பது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையா? இல்லை. கறுப்புப் பணத்தில் பங்கு கேட்பதற்கான நடவடிக்கையா? என்பது இந்திய மக்களின் மனதில் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.
வங்கியில் சேமிக்க முடியாத அளவுக்கு மீறிய பணத்தைதான் சிலர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். எனவே, அரசு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வெளியிட்டவுடன். தங்களிடமுள்ள பணத்தை கொண்டுவந்து கொடுத்து "எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல" என்று சொல்லி யாரும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒருவேளை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த ரூபாய் நோட்டு மாற்றம் என்பதை அரசு தெரிவிக்காமல் இருந்தால் இப்படி நடந்திருக்கலாம். ஆனால், அரசு எல்லா ரகசியத்தையும் அடுக்கடுக்காக வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் சுதாரித்துக் கொண்டே வருகிறார்கள்.
இனிமேல் இவர்கள் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்கள் என்பதும் விளங்கவில்லை.
எனக்கு இது சரியா படலை! டைரக்ட்டர் சங்கர்கிட்ட சொல்லி ஆபீஸ் ரூம் போட்டே ஆகணும்! ஆங்!!