சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும். அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.
இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி புதிய முதல்வரை ஏகனமதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்களூரில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உடனே சென்னை திரும்பி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தி புதிய முதல்வர் பெயரை ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன் பின்னர்தான் புதிய முதல்வர் பதவியேற்பார்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னையில் கூடுகிறார்கள். அந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டு அவரின் பெயர் ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால் தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரில் யாராவது தேர்வாகலாம் என்றும் கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும். அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.
இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி புதிய முதல்வரை ஏகனமதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்களூரில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உடனே சென்னை திரும்பி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தி புதிய முதல்வர் பெயரை ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன் பின்னர்தான் புதிய முதல்வர் பதவியேற்பார்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னையில் கூடுகிறார்கள். அந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டு அவரின் பெயர் ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால் தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரில் யாராவது தேர்வாகலாம் என்றும் கூறப்படுகிறது.