மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கோபிநாத் முண்டே முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட மை காய்வதற்குள்ளாகவே அவர் மரணித்துப் போனது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, தாம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் வாய்ப்பு கிடைத்தால் முதல்வராவேன் என்றும் பிரகடனம் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பாஜக- சிவசேனா கூட்டணியும் தேர்தல் கோதாவில் குதித்தது. சிவசேனாவோ தங்களுக்கே முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
சிவசேனா தொண்டர்களோ கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் உயர்த்தினர்.
பாரதிய ஜனதா கட்சியினரோ தங்களுக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்று கூறிவந்தனர். மேலும் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே அல்லது பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாஜகவின் கூறிவந்தனர். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.
இதைத்தான் நேற்று முதல் ஊடகங்கள் எழுதி வருகின்றன. இன்றைய நாளிதழ்களில் கூட கோபிநாத் முண்டேவை முதல்வர் வேட்பாளராக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த செய்திகள் எழுதப்பட்ட மை காய்ந்து போவதற்குள் டெல்லி சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்துவிட்டார் கோபிநாத் முண்டே. இது பாஜகவினரை மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, தாம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் வாய்ப்பு கிடைத்தால் முதல்வராவேன் என்றும் பிரகடனம் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பாஜக- சிவசேனா கூட்டணியும் தேர்தல் கோதாவில் குதித்தது. சிவசேனாவோ தங்களுக்கே முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
சிவசேனா தொண்டர்களோ கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் உயர்த்தினர்.
பாரதிய ஜனதா கட்சியினரோ தங்களுக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்று கூறிவந்தனர். மேலும் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே அல்லது பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாஜகவின் கூறிவந்தனர். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.
இதைத்தான் நேற்று முதல் ஊடகங்கள் எழுதி வருகின்றன. இன்றைய நாளிதழ்களில் கூட கோபிநாத் முண்டேவை முதல்வர் வேட்பாளராக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த செய்திகள் எழுதப்பட்ட மை காய்ந்து போவதற்குள் டெல்லி சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்துவிட்டார் கோபிநாத் முண்டே. இது பாஜகவினரை மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.