அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பாடத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க முடிவு செய்திருந்த குஜராத் அரசு தற்போது அதற்கு மோடி விருப்பம் தெரிவிக்காததைத் தொடர்ந்து முடிவைக் கைவிட்டுள்ளது.
அந்த யோசனையைக் கைவிட்டு விட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் புபேந்திரசின்ஹ் சுடாஸ்மாவை மோடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தத் திட்டம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம்.
இதுகுறித்து சுடாஸ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி காலையில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இப்படி உயிருடன் உள்ளவர்கள் குறித்துப் பாடப் புத்தகத்தில் பாடம் வைப்பது பொருத்தமற்றது என்று கூறினார்.
மேலும் தனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைப்பது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றும் கூறினார். இந்தத் திட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். எனவே இத்திட்டம் கைவிடப்படுகிறது. உஙக்ளது விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று அவரிடம் கூறி விட்டேன். இந்ததத் திட்டத்தை குஜராத் அரசு மேற்கொண்டு எடுத்துச் செல்லாது என்றார்.
அந்த யோசனையைக் கைவிட்டு விட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் புபேந்திரசின்ஹ் சுடாஸ்மாவை மோடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தத் திட்டம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம்.
இதுகுறித்து சுடாஸ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி காலையில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இப்படி உயிருடன் உள்ளவர்கள் குறித்துப் பாடப் புத்தகத்தில் பாடம் வைப்பது பொருத்தமற்றது என்று கூறினார்.
மேலும் தனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைப்பது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றும் கூறினார். இந்தத் திட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். எனவே இத்திட்டம் கைவிடப்படுகிறது. உஙக்ளது விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று அவரிடம் கூறி விட்டேன். இந்ததத் திட்டத்தை குஜராத் அரசு மேற்கொண்டு எடுத்துச் செல்லாது என்றார்.