"அநாதை குழந்தைகளை கூட்டி வந்து வச்சிக்கிட்டு நீ ஏன் தெருத்தெருவா கை ஏந்திக்கிட்டு திரியிற? நீ மூடிகிட்டு இரு, அந்தக் குழந்தைகளே கை ஏந்திட்டு போகட்டும். ரெண்டும் ஒண்ணுதானே?"
-எழுத்ததிகாரன்.
என்கிட்டே ஒரு நண்பர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கன்னு கேட்டு போன் பண்ணினார். அனால், நான் அறிமுகம் இல்லாத யாருக்கும் உதவி செய்யிரதில்லைன்னு சொன்னேன். அதற்கு அவர் சொன்னார், நாங்க 50 வருஷமா இந்த அமைப்பை நடத்திகிட்டு இருக்கோம், எங்களோட வெப் சைட்டுல எல்லா ஆதாரமும் போட்டுருக்கோம் போய் பார்த்துட்டு உதவி பண்ணுங்கன்னு சொன்னார்.
சரி, 50 வருஷமா நடத்துரிங்க, நான் நம்புறேன். ஆனா உங்க வெப் சைட்டுல ஏழைக் குழந்தைகள் போட்டோ மட்டும் தானே இருக்குது மத்த எதுவும் இல்லையே என்றேன்.
வேற என்ன சார் உங்களுக்கு வேணும்? என்றார்.
இந்த 50 வருஷத்துல உங்க மூலமா படிச்சு முன்னுக்கு வந்து நல்ல நிலமையில இருக்கக் கூடிய ஒருத்தரைப் பத்தி கூட உங்க வெப் சைட்டுல போடலையே ஏன்? 50 வருஷமா அவங்க எல்லாரும் குழந்தைகளாகவே இருக்காங்களா? என்று கேட்டேன்.
அவர் எதுவுமே பேசவில்லை. சற்று நேரம் அமைதியாகிவிட்டு, "சாரி சார். நல்ல கேள்வி தான். இது வரைக்கும் எங்ககிட்ட யாருமே இப்படி கேட்டதில்லை. கூடிய சீக்கிரம் எங்க டிரஸ்ட் கமிட்டியில பேசிட்டு அந்த ஆதாரத்தையும் வெப் சைட்டுல போடுறோம். அதுக்கு அப்புறமா உங்களுக்கு கால் பண்ணுறேன் எங்களுக்கு உதவி செய்வீங்களா?" என்று கேட்டார்.
கண்டிப்பாக உதவி செய்கிறேன். நான் மட்டுமல்ல எனது நண்பர்களையும் உதவி செய்ய சொல்கிறேன் என்று உத்திரவாதமும் கொடுத்தேன்.
ரெண்டு மாதம் கழித்து அதே நபர் எனக்கே போன் பண்ணினார்.(இன்னொரு நம்பருக்கு) அதே பழைய டையலாக்கை அப்படியே ஒரு வார்த்தை மாறாமல் பேசினார். நான் சிரித்தேன். ஏன் சார் சிரிக்கிறீங்க? என்று கேட்டார். இந்த சிரிப்பை இதற்கு முன் நீங்க எப்போதாவது கேட்டதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா என்றேன்.
"இல்லை" என்றார்.
"உங்க வெப் சைட்டுல இன்னமும் ஏழைக் குழந்தைகள் போட்டோ மட்டும் தான் சார் இருக்கு" என்றேன்.
அவ்வளவுதான். சிக்னல் இல்லாம போன் கட்டாகிடுச்சு!
என்னோட கேள்வி இதுதான். அநாதை இல்லங்களிலும், ஆதரவற்ற அமைப்புகளிலும் வளரும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? 50 வருஷமா ஒருத்தன் ஏழைக்குழந்தைகள் என்றே உதவி கேட்டு திரிகிறான். நாமும் பணம் பொருட்களை கொடுக்கிறோம். ஆனால் அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்?
படிப்பு செலவுக்கு, மருத்துவ செலவுக்கு, சாப்பாட்டுக்கு என்று பொது மக்களிடமே உதவி கேட்கிறார்களே பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும், ஹோட்டல் நடத்துறவங்களும் ஏழைகளுக்கு உதவி செய்ய மாட்டார்களா? அங்க போயி கேக்க வேண்டியது தானே?
இவனுங்க கேக்க மாட்டானுங்க, ஏன்னா அங்கெல்லாம் போனா ஆட்டையப் போட முடியாதுல்ல. மருத்துவமனையில உதவி கேட்டா டைரக்ட்டா மருத்துவம் நடந்துடும்! பள்ளிக் கூடத்துல உதவி கேட்டா டைரக்ட்டா படிக்க வச்சுடுவாங்க. ஹோட்டலுக்குப் போனா டைரக்ட்டா சாப்பாடு போட்டுடுவாங்க. அப்பறம் இவனுங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவானுங்க...
அநாதை குழந்தைகளை கூட்டிகிட்டு வந்து வச்சிக்கிட்டு நீ ஏன் தெருத்தெருவா கை ஏந்திக்கிட்டு திரியிற? நீ மூடிகிட்டு இரு, அந்தக் குழந்தைகளே கை எந்திட்டு போகட்டும். ரெண்டும் ஒண்ணுதானே?...
-எழுத்ததிகாரன்.
என்கிட்டே ஒரு நண்பர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கன்னு கேட்டு போன் பண்ணினார். அனால், நான் அறிமுகம் இல்லாத யாருக்கும் உதவி செய்யிரதில்லைன்னு சொன்னேன். அதற்கு அவர் சொன்னார், நாங்க 50 வருஷமா இந்த அமைப்பை நடத்திகிட்டு இருக்கோம், எங்களோட வெப் சைட்டுல எல்லா ஆதாரமும் போட்டுருக்கோம் போய் பார்த்துட்டு உதவி பண்ணுங்கன்னு சொன்னார்.
சரி, 50 வருஷமா நடத்துரிங்க, நான் நம்புறேன். ஆனா உங்க வெப் சைட்டுல ஏழைக் குழந்தைகள் போட்டோ மட்டும் தானே இருக்குது மத்த எதுவும் இல்லையே என்றேன்.
வேற என்ன சார் உங்களுக்கு வேணும்? என்றார்.
இந்த 50 வருஷத்துல உங்க மூலமா படிச்சு முன்னுக்கு வந்து நல்ல நிலமையில இருக்கக் கூடிய ஒருத்தரைப் பத்தி கூட உங்க வெப் சைட்டுல போடலையே ஏன்? 50 வருஷமா அவங்க எல்லாரும் குழந்தைகளாகவே இருக்காங்களா? என்று கேட்டேன்.
அவர் எதுவுமே பேசவில்லை. சற்று நேரம் அமைதியாகிவிட்டு, "சாரி சார். நல்ல கேள்வி தான். இது வரைக்கும் எங்ககிட்ட யாருமே இப்படி கேட்டதில்லை. கூடிய சீக்கிரம் எங்க டிரஸ்ட் கமிட்டியில பேசிட்டு அந்த ஆதாரத்தையும் வெப் சைட்டுல போடுறோம். அதுக்கு அப்புறமா உங்களுக்கு கால் பண்ணுறேன் எங்களுக்கு உதவி செய்வீங்களா?" என்று கேட்டார்.
கண்டிப்பாக உதவி செய்கிறேன். நான் மட்டுமல்ல எனது நண்பர்களையும் உதவி செய்ய சொல்கிறேன் என்று உத்திரவாதமும் கொடுத்தேன்.
ரெண்டு மாதம் கழித்து அதே நபர் எனக்கே போன் பண்ணினார்.(இன்னொரு நம்பருக்கு) அதே பழைய டையலாக்கை அப்படியே ஒரு வார்த்தை மாறாமல் பேசினார். நான் சிரித்தேன். ஏன் சார் சிரிக்கிறீங்க? என்று கேட்டார். இந்த சிரிப்பை இதற்கு முன் நீங்க எப்போதாவது கேட்டதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா என்றேன்.
"இல்லை" என்றார்.
"உங்க வெப் சைட்டுல இன்னமும் ஏழைக் குழந்தைகள் போட்டோ மட்டும் தான் சார் இருக்கு" என்றேன்.
அவ்வளவுதான். சிக்னல் இல்லாம போன் கட்டாகிடுச்சு!
என்னோட கேள்வி இதுதான். அநாதை இல்லங்களிலும், ஆதரவற்ற அமைப்புகளிலும் வளரும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? 50 வருஷமா ஒருத்தன் ஏழைக்குழந்தைகள் என்றே உதவி கேட்டு திரிகிறான். நாமும் பணம் பொருட்களை கொடுக்கிறோம். ஆனால் அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்?
படிப்பு செலவுக்கு, மருத்துவ செலவுக்கு, சாப்பாட்டுக்கு என்று பொது மக்களிடமே உதவி கேட்கிறார்களே பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும், ஹோட்டல் நடத்துறவங்களும் ஏழைகளுக்கு உதவி செய்ய மாட்டார்களா? அங்க போயி கேக்க வேண்டியது தானே?
இவனுங்க கேக்க மாட்டானுங்க, ஏன்னா அங்கெல்லாம் போனா ஆட்டையப் போட முடியாதுல்ல. மருத்துவமனையில உதவி கேட்டா டைரக்ட்டா மருத்துவம் நடந்துடும்! பள்ளிக் கூடத்துல உதவி கேட்டா டைரக்ட்டா படிக்க வச்சுடுவாங்க. ஹோட்டலுக்குப் போனா டைரக்ட்டா சாப்பாடு போட்டுடுவாங்க. அப்பறம் இவனுங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவானுங்க...
அநாதை குழந்தைகளை கூட்டிகிட்டு வந்து வச்சிக்கிட்டு நீ ஏன் தெருத்தெருவா கை ஏந்திக்கிட்டு திரியிற? நீ மூடிகிட்டு இரு, அந்தக் குழந்தைகளே கை எந்திட்டு போகட்டும். ரெண்டும் ஒண்ணுதானே?...