ஃபேஸ்புக் இணையதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் கனடாவில் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பயன் அடையலாம்.
ஃபேஸ்புக்கின் இந்த புதிய தொழில்நுட்பத்தில் இணையத்தின் வழியே கட்டணம் ஏதுமின்றி தொலைபேசி அழைப்புகளை அழைத்து பேசிக்கொள்ளலாம். மேலும் வாய்ஸ் மெயில் எனப்படும் குரல் பதிவையும் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. இவையிரண்டிற்கும் கட்டணம் ஏதும் இல்லை. உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதி சாதாரண போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்க முடியாது. ஆண்ட்ராய்டு,ஆப்பிள், மற்றும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியின் மூலம் பயன்பெறலாம்.
கனடாவில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 18 மில்லியன் மக்களில், எத்தனை பேர்களை இந்த புதிய வசதி கவர்ந்து இழுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கனடாவில் இந்த புதிய வசதிக்கு ஏற்பட இருக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக உலகம் முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கின் இந்த புதிய தொழில்நுட்பத்தில் இணையத்தின் வழியே கட்டணம் ஏதுமின்றி தொலைபேசி அழைப்புகளை அழைத்து பேசிக்கொள்ளலாம். மேலும் வாய்ஸ் மெயில் எனப்படும் குரல் பதிவையும் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. இவையிரண்டிற்கும் கட்டணம் ஏதும் இல்லை. உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதி சாதாரண போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்க முடியாது. ஆண்ட்ராய்டு,ஆப்பிள், மற்றும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியின் மூலம் பயன்பெறலாம்.
கனடாவில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 18 மில்லியன் மக்களில், எத்தனை பேர்களை இந்த புதிய வசதி கவர்ந்து இழுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கனடாவில் இந்த புதிய வசதிக்கு ஏற்பட இருக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக உலகம் முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.