நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
28/8/2012, 1:41 pm
செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி 28-mars2-300
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.

"க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதலாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது," என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.

இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது க்யூரியாசிட்டி.

க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப்பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

அடுத்த சில தினங்களில் க்யூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
29/8/2012, 4:28 am
செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி F90fa810
நியூயார்க், ஆக. 28-

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. அங்கு மனிதர்கள் வாழமுடியுமா? என கண்டறிய கியூரியாசிட்டி என்ற ஆய்வுகூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு பத்திரமாக தரை இறங்கிய அந்த விண்கலம் தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை படம் எடுத்து அனுப்பி வருகிறது. சமீபத்தில் அனுப்பிய ஒரு போட்டோவில் அடையாளம் காண முடியாத ஒரு பொருள் பறப்பது போன்று வெளிச்சத்துடன் தெரிந்தது. எனவே அது வேற்று கிரகத்தவரின் பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என கூறப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நடத்தும் ஆய்வை அறிய வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டும் மூலம் வந்து இறங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. அதை மெய்பிக்கும் வகையில் தற்போது கியூரியாசிட்டி அனுப்பிய மற்றொரு போட்டோவில் தடயங்கள் சிக்கியுள்ளன.

அதில் மனித கைவிரல் எலும்பு ஒன்றும் கூம்பு போன்ற வடிவம் கொண்ட மற்றொரு பொருளும் உள்ளது. மற்றொரு போட்டோவில் ஷூ இருப்பது போன்றும் பதிவாகி உள்ளது. எனவே அங்கு அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதுதவிர கியூரியாசிட்டி அங்குள்ள மலைகள், பாறை படிவங்கள் போன்றவற்றை கலரில் மிகவும் தெளிவாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் பூமியில் இருந்து பதிவு செய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ஆடியோ பதிவு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்தது.

இதை நாசா விஞ்ஞானிகள் கியூரியாசிட்டி விண்கலத்துக்கு அனுப்பினர். அங்கிருந்து அதே குரல் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து ஒலித்தது. இந்த தகவலை கலிபோர்னியா பசதெனா ஆய்வு கூடத்தின் தலைமை டொகம்யூனிகேசன் என்ஜினீயர் சாட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

சந்திரனுக்கு அப்பால் உள்ள மற்றொரு கிரகத்தில் இருந்து மனித குரல் கேட்பது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி

From எழுத்ததிகாரன்

Topic ID: 402

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...