மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்கான உறைவிட பள்ளி ஒன்றில் படிக்கும் 5 சிறுவர், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில் உள்ளது சந்திரபிரபா அறக்கட்டளை நடத்தும் பழங்குடியின குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளி. அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றபோது தனது தாயிடம் தெரிவித்த விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த பள்ளி விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதுடன், அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து உறவு கொள்வது, இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது, சிறுவர் சிறுமியரை ஒருவருடன் ஒருவர் உறவு கொள்ள வைப்பது, மறுத்தால் அவர்களை நாயின் மலத்தை சாப்பிட வைப்பது, அதை சாப்பிடும்போது அவர்கள் வாந்தி எடுத்தால் அதையும் அவர்களை சாப்பிட வைப்பது என்று பல கொடுமைகள் நடந்துள்ளது.
இதை எல்லாம் கேட்ட சிறுமியின் தாய் குழந்தை நல பாதுகாவலர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது 5 குழந்தைகள் நடந்ததை விவரமாக தெரிவித்தனர். இந்த பள்ளியில் 4 முதல் 14 வயது வரை உள்ள பழங்குடியின மற்றும் ஏழை குழந்தைகள் 28 பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு தான் இத்தனை கொடுமையும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அறக்கட்டளையின் உரிமையாளரான 52 வயது நபர் மற்றும் 30 வயது பெண் மேனேஜரை கைது செய்தனர். குழந்தைகள் அனைவரும் விடுமுறைக்காக ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வந்தவுடன் விசாரித்தால் தான் அதில் மேலும் எத்தனை பேருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்ற விவரம் தெரிய வரும்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில் உள்ளது சந்திரபிரபா அறக்கட்டளை நடத்தும் பழங்குடியின குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளி. அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றபோது தனது தாயிடம் தெரிவித்த விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த பள்ளி விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதுடன், அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து உறவு கொள்வது, இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது, சிறுவர் சிறுமியரை ஒருவருடன் ஒருவர் உறவு கொள்ள வைப்பது, மறுத்தால் அவர்களை நாயின் மலத்தை சாப்பிட வைப்பது, அதை சாப்பிடும்போது அவர்கள் வாந்தி எடுத்தால் அதையும் அவர்களை சாப்பிட வைப்பது என்று பல கொடுமைகள் நடந்துள்ளது.
இதை எல்லாம் கேட்ட சிறுமியின் தாய் குழந்தை நல பாதுகாவலர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது 5 குழந்தைகள் நடந்ததை விவரமாக தெரிவித்தனர். இந்த பள்ளியில் 4 முதல் 14 வயது வரை உள்ள பழங்குடியின மற்றும் ஏழை குழந்தைகள் 28 பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு தான் இத்தனை கொடுமையும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அறக்கட்டளையின் உரிமையாளரான 52 வயது நபர் மற்றும் 30 வயது பெண் மேனேஜரை கைது செய்தனர். குழந்தைகள் அனைவரும் விடுமுறைக்காக ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வந்தவுடன் விசாரித்தால் தான் அதில் மேலும் எத்தனை பேருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்ற விவரம் தெரிய வரும்.