Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
14/12/2012, 4:17 pm
நான்: கடவுளே எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கிறது.

கடவுள்: என்ன சந்தேகம் மானிடா?

நான்: போதை... நல்லதா? கெட்டதா?

கடவுள்: பேதை என்பது பெண்களைக் குறிக்கும் சொல் என்பது தெரியும். ஆனால் இது என்ன போதை?...

நான்: இதுவும் பெண்கள் மாதிரிதான்.

கடவுள்: புரியவில்லையே மானிடா....

நான்: மது என்று சொல்லுவாங்கல்ல.... அதுதான் கடவுளே போதை!

கடவுள்: ஓ! மதுவா...? மானிடப் பூச்சிகள் இதை 'சரக்கு' என்று சொல்வார்கள் தானே?...

நான்: ஆமாம் கடவுளே...

கடவுள்: சரி, இதை ஏன் பெண்களுடன் ஒப்பிட்டு பேசினாய்?

நான்: பெண்களை சைட் அடிச்சா போதை வரும். மதுவை ஸ்ட்ரைட்டா அடிச்சா போதை வரும்.

கடவுள்: ம்ம்ம்ம்ம்... பஞ்ச் டயலாக்கா?...

நான்: சரி சொல்லுங்கள் கடவுளே. மது நல்லதா? கெட்டதா?

கடவுள்: மது கெட்டதில்லை மாடிடா! அது ஒரு பவர் என்ஜின்!!

நான்: என்னாது... ப...வ...ர்.... என்ஜினா?... என்ன கடவுளே, கூகுள் சர்ச் என்ஜின் மாதரி இவ்வளவு பவரா சொல்லுறீங்க?

கடவுள்: ஆமாம் மானிடா. மது நல்லதுதான்!

நான்: அட போங்க கடவுளே! நீங்க பாண்டிச்சேரி கடவுள் னு நினைக்கிறேன்!

கடவுள்: ஏன் அப்படி சொல்லுகிறாய் மானிடா?

நான்: பாண்டிச்சேரியில்தான் டூப்ளிகேட் சரக்கு தயாரிக்கிறார்களாம்.... நீங்களும் டூப்ளிகேட் கடவுள் தானே? அதுதான் மதுவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க போலருக்கு.... நாங்கல்லாம் ஒயின் ஷாப்பை மூட சொல்லி போராட்டம் செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க என்னடான்னா மது நல்லது..., பவர் என்ஜின்... அப்படி இப்படின்னு உளறிட்டு இருக்கீங்க...

கடவுள்: சரி மானிடா.... உனது உடம்பை ஒரு பெண் மெதுவாக தடவிக்கொடுத்தால் எப்படி இருக்கும்?

நான்: சுகமாக இருக்கும் கடவுளே...!

கடவுள்: அதையே கொஞம் அழுத்தமாக, நீண்ட நேரம் தடவினால்?...

நான்: உராய்வினால் சதை தேய்ந்து எரிச்சல் உண்டாகும்!

கடவுள்: அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டால் எப்படி இருக்கும்?

நான்: கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கும்!

கடவுள்: இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்தால்?

நான்: லைட்டா வலிக்கும்?

கடவுள்: இறுக்கத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தினால்?

நான்: வலியும் அதிகரிக்கும்?

கடவுள்: இடைவிடாமல் இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் என்னாகும்?

நான்: மூச்சுத்திணறி செத்துப் போய்டுவேன்! இப்ப என்னதான் சொல்ல வரீங்க கடவுளே?..

கடவுள்: அளவுக்கு அதிகமாகப் போனால் எல்லாமே கெட்டது தான் டா!

நான்: புரிந்து விட்டது கடவுளே! சரி... குடிகாரர்கள் எல்லாம் நடக்கும்போது ஏன் தள்ளாடுகிறார்கள்? பேசும்போது ஏன் உளறுகிறார்கள்? ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள்? முக்கியமாக தேவையே இல்லாமல் சிரிக்கிறார்களே ஏன்?...

கடவுள்: மது என்பது பவர் என்ஜின் என்று சொன்னேன் அல்லவா... அதனால்தான் மதுவை அருந்தியவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறார்கள்!

நான்: இப்படியெல்லாம் ஒரே லைன்ல சொன்னால் புரியாது கடவுளே.  'எழுத்ததிகாரன்' ஸ்டைலில் உதாரணத்துடன் தெளிவாக சொல்லுங்கள்.

கடவுள்: கொஞ்சம் பெரிதாக இருக்கும் பரவாயில்லையா?

நான்: திருவள்ளுவர் மாதிரி ரத்தினச் சுருக்கமாக உங்களுக்கு சொல்லத் தெரியாதா கடவுளே?

கடவுள்: அதான் மது என்றால் "பவர் என்ஜின்" என்று பிளாட்டினச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேனே.... புரிந்துகொள்ள வேண்டியதுதானே?...

நான்: இது திருக்குறளை விட சிறியதாக இருக்கிறதே...

கடவுள்: பிளாட்டின சுருக்கம் அப்படித்தான் இருக்கும்!

நான்: அப்படியானால், இரத்தின சுருக்கம் என்பது எப்படி இருக்கும்?

கடவுள்: சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து, குதர்க்கமாக பேசுவதுதான் ரத்தினச் சுருக்கம் என்பது.

நான்: அப்படின்னா பிளாட்டினமும் வேண்டாம், ரத்தினமும் வேண்டாம். பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் உங்கள் ஸ்டைலிலேயே சொல்லுங்கள். ஆனால் புரியிற மாதரி சொல்லுங்கள்...

கடவுள்: அதாவது மானிடா..., மது என்பது உயிர்களின் உடலுருப்புகளுக்கான ஒரு பவர் என்ஜின்! இதை அளவோடு பயன்படுத்தினால் நல்லது. அளவுக்கு மீறினால் ஆபத்தாகவும் முடியும்.

நான்: இதைத்தான் ஏற்கெனவே சொல்லிட்டீங்களே... வேற எதாவது சொல்லுங்க கடவுளே.

கடவுள்: டேய்! நான் பேசும்போது குறுக்கே பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.....

நான்: ஓ! சரி கடவுளே... மன்னிச்சுடுங்க!

கடவுள்: சரி, உன்னுடைய முதல் கேள்வியை கேளு...

நான்: "..................."

கடவுள்: உன்னை தாம்பா கேக்குறேன்... உன்னோட முதல் கேள்வி என்ன?

நான்: நீங்கதான் குறுக்கே பேசக் கூடாதுன்னு சொன்னீங்க.... இப்ப பேசலாமா கடவுளே...?

கடவுள்: குருக்கேதான் பேசக் கூடாதுன்னு சொன்னேன். இப்படி குதர்க்கமா பேச சொல்லல. கேள்வி கேக்கும்போது பதில் சொல்லு.

நான்: குடிகாரர்கள் போதையில் நடக்கும்போது தள்ளாடுவது ஏன்? இதுதான் என்னுடைய கேள்வி.

கடவுள்: அதாவது, மது என்பது பவர் என்ஜின் இல்லையா?... இந்த பவர் என்ஜின் மனிதனுடைய உடலுக்குள் போனவுடனே, உள்ளே இருக்கும் உறுப்புக்கள் என்ன செய்கின்றன என்பதை கவனிக்கிறது. அப்படி கவனிக்கும்போது எல்லா உறுப்புகளும் தங்களுடைய முழு திறனையும் பயன்படுத்தாமல் இருப்பதை பார்த்து கோபமடைகிறது... அதனால் ஒவ்வொரு உறுப்புக்களையும் தங்களுடைய முழு பவருடன் செயல்படுமாறு கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக கட்டாய உத்தரவு போட முயற்சிக்கிறது... இந்த மதுவானது முதலில் மனிதனின் கண்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கிறது.

நான்: மது ஏன் முதலில் கண்களை போய் பார்க்கிறது?

கடவுள்: குடிகாரர்கள் ஏன் தள்ளாடி நடக்கிறார்கள் என்றுதானே கேட்டாய்?... அதற்கான பதில் கண்களில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது 'அந்தப்பார்வை'யில் உருவாகும் சம்பவம் என்பதால் முதலில் கண்களைத்தான் சந்திக்க வைக்க முடியும்.

நான்: சரி சொல்லுங்கள்...

கடவுள்: கண்களைப் பார்க்கும்போது, அது 100% ஷூம் செய்யாமல், 80% ஷூமிலேயே நிற்பதை கவனிக்கிறது... இதற்கு மேல் நான் சொன்னால் உனக்குப் புரியாது.... மதுவும், கண்களும் நேரடியாக பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை கீழே படி...

மது: என்னாம்மா கண்ணு...! என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?

கண்கள்: தூரத்தில் இருக்கும் காட்சியை நான் இந்த மனிதனுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன்... சரி நீங்கள் யார்?

மது: நான் யார் என்பதை பிறகு சொல்கிறேன்... நீ ஏன் 100% ஷூம் செய்யாமல், 80% ஷூம்லேயே நிற்கிறாய்? முழுசா 100% ஷூம் பண்ணு!

கண்கள்: நீங்கள் சொல்வதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. எனக்கு மூளை உத்தரவு கொடுத்தால்தான் செய்வேன்.

மது: எவன் அவன் மூளை?.... அவன் என்ன உன்னை 80% தான் ஷூம் பன்னனும்னு உனக்கு உத்தரவு கொடுத்தானா?

கண்கள்: இல்லை!

மது: அப்புறம் நீ ஏன் 80% லயே நிற்கிறாய்? மூளை உனக்கு என்ன உத்தரவு போட்டான்? முதல்ல அதை சொல்லு.

கண்கள்: மனிதன் பார்க்கும் காட்சியை அவனுக்கு காட்ட வேண்டும் என்பது மூளையின் உத்தரவு.

மது: அப்புறம் எதுக்கு 100% முழுசா ஷூம் செய்து காட்டாமல் 80% மட்டும் ஷூம் செய்து ஊழல் செய்கிறாய்?

கண்கள்: லூசா நீ?... 80% ஷூம் செய்தபோதே அவன் அந்தக் காட்சியை உணர்ந்து கொண்டான் அதனால் நான் அதோடு நிற்கிறேன். ஒருவேளை அவனுக்கு காட்சி புரியவில்லை என்றால், நான் மேலும் கொஞ்சம் ஷூம் செய்து காட்டுவேன்...

மது: இந்த டகால்டி கதையெல்லாம் என்கிட்டே சொல்லாதே... உன்னால 100% ஷூம் பண்ண முடியுமா? முடியாதா?

கண்கள்: முடியும்.! Nothing is Impossible!

மது: இங்கிலீஷ் எல்லாம் பேசுறே... ஆனா 100% முழுசா ஷூம் பன்னமாட்டியா?! யாரை ஏமாத்த பார்க்கிறே? இவ்வளவு நாளும் இப்படித்தான் 20% வேலை செய்யாமல் OP அடிச்சுகிட்டு இருந்தியா?

கண்கள்: அதிபுத்திசாலித் தனமாக நடந்து கொண்டு என் வேலையைக் கெடுக்காதீர்கள். நான் மூளை சொல்வதைத்தான் கேட்டு நடப்பேன். உங்கள் கட்டளைக்கு நான் செயல்பட முடியாது. முதலில் இங்கிருந்து செல்லுங்கள்!!

மது: உன்னோட முழுத்திறமையையும் பயன்படுத்தாமல் தப்பு தப்பா வேலை குடுக்குற அந்த மூளை எங்கே இருக்கான்? அவனை நான் பிறகு கவனித்துக் கொள்ளுகிறேன். இப்ப நீ மரியாதையா 100% ஷூம் பண்ணுறியா? இல்லை நான் புடிச்சி இழுத்து விடவா?

கண்கள்: இதோ பார்! நான் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.... தூரத்தில் மரம் இருக்கிறது என்பதை நான் மனிதனுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய அதிமேதாவித் தனத்தால் என்னை 100% ஷூம் செய்ய வைத்தால், தூரத்தில் இருக்கக்கூடிய மரம் அவனுக்குப் பக்கத்தில் இருப்பதாக தெரியும். இதனால் விளைவுகள் தவறாக முடியும். மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு.!

மது: ஏய்... சொல்லிகிட்டே இருக்கேன், திரும்ப திரும்ப கதை பேசிக்கிட்டு இருக்கே.... பவர் என்ஜின்-னு எனக்கு அதிகாரிகள் பேரு வச்சுருக்காங்க... நான் என்னோட பவரைட் காட்ட வேண்டாமா?

கண்கள்: நான் மூளையின் உத்தரவிற்கு மட்டுமே பணிந்து செயல்படுவேன். உன்னுடைய பவரை வேற எங்கயாவது போயி காட்டு. என்கிட்டே காட்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

மது: என்ன? என்ன? என்ன பயங்கரமா இருக்கும்.?

கண்கள்: அடேய் முட்டாள்... நான் இல்லையென்றால் மனிதர்களுக்கு உலகமே சூன்யமாகிவிடும். என்னைக் கோபப்படுத்தி நீயும் சூன்யமாகி விடாதே...

கடவுள்: தம்மாத்தூண்டு கண்ணு நீ... என்னையே மிரட்டுறியா?

கண்கள்: இப்ப இங்கேருந்து போறியா? சுடு தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்தவா?

மது: நானே தண்ணிதான்... எனக்கே தண்ணி ஊத்துவியா நீ?

கடவுள்: இப்படி நடந்த உரையாடலால் கோபமடைந்த மதுவானது, தனது பவரைப் பயன்படுத்தி கண்களின் செயல்பாட்டை 100% ஷூம் செய்ய வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து கொள்கிறது... இதனால் தூரத்தில் இருக்கும் காட்சிகள் குடிகாரர்களுக்கு அருகில் இருப்பது போல தோன்றுகிறது. அந்த நேரத்தில் குனிந்து தரையைப் பார்க்கும்போது தரை சற்று உயரமாக இருப்பதுபோல தோன்றுகிறது. எனவே மேட்டில் கால் வைக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தரைக்கு மேலேயே பேலன்சை விட்டு விடுகிறார்கள். இதனால்தான் குடிகாரர்கள் போதையில் நடக்கும்போது தள்ளாடி நடக்கிறார்கள்.

இப்போது புரிந்ததா மானிடா?

நான்: ஓ.... அதனால்தான் விளையாட்டு வீரர்கள் போதை மருந்து உட்கொண்டு விளையாடினால் அதிவேகமாக செயல்பட்டு வெற்றி பெறுகிறார்களா? அதனால்தான் மதுவை ஊக்க மருந்து என்று சொல்கிறார்களா? இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது கடவுளே. அது சரி, எங்கள் ஊரில் உள்ள குடிகாரர்கள் ரோட்டில் சும்மா போகிறவர்களிடம் வீண் சண்டைக்கு போகிறார்களே அது ஏன்?

கடவுள்: அதுவா?.... கண்களின் செயல்பாட்டை அதிகரித்ததுபோல, மூளையின் செயல்பாட்டையும் மது அதிகரித்ததன் விளைவால் ஏற்படும் குளறுபடிதான் அது.

நான்: அதையும் சற்று எனக்கு விளக்கி சொல்ல முடியுமா கடவுளே?

கடவுள்: உன்னுடைய மற்ற எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து மொத்தமாக இன்னொருநாள் பதில் சொல்லுகிறேன். இப்ப தொடரும் போடு!!

நான்: கடவுளுக்கே தலை சுத்த ஆரம்பிச்சுடுச்சு போலருக்கு!!

கடவுள்: போதை ஏறிப் போச்சு!
புத்தி மாறிப்போச்சு!
புத்தம் பூமி எனக்கு........ சொந்தமாகிப் போச்சு!

தொடரும்...

- எழுத்ததிகாரன்.

Message reputation : 100% (1 vote)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)

From எழுத்ததிகாரன்

Topic ID: 552

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...