Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
27/7/2012, 8:55 pm
கும்மிடிப்பூண்டி, ஜூலை.27-
பேருந்தில் 3 பேர் கொலை: தமிழக-ஆந்திர எல்லையில் சைக்கோ வாலிபர் பதுங்கல் 93365f10
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் சென்னை வந்தபோது பஸ்சுக்குள் 3 பயணிகள் குத்திக் கொலை செய்யப்பட்டனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பஸ்சுக்குள் பயணியோடு ஒருவராக பயணம் செய்த ஒருவர் இந்த கொடூர கொலையை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கொலை செய்யப்பட்ட அஜய் விஸ்வாஸ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். நிரஞ்சன் ஆந்திராவில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். ராம்பாபு ஓங்கோலை சேர்ந்த வியாபாரி. கத்திக்குத்துடன் சிகிச்சை பெற்று வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ரமேஷ் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர்.

ஓடும் பஸ்சில் பயணிகள் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயணி வாயில் துணியை அமுக்கி சராமாரியாக கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

தமிழக, ஆந்திர எல்லை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. எந்தவித முன்விரோதமும், பகையும் இல்லாமல் அப்பாவி பயணிகள் 3 பேரை குத்தி கொன்றதன் மூலம் கொலையாளி ஒரு மனநோயாளி என்பதை என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு ருமேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகிறார்கள். ஆரப்பாக்கம் அருகே அவன் தப்பி ஓடியதால் தமிழக-ஆந்திர பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களிலும் இரவு-பகலாக சோதனை செய்யப்பட்டது. ஆரப்பாக்கம் சோதனை சாவடியில் போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர், 8 ஏட்டுகள் கொண்ட போலீஸ் படை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தடா வனப்பகுதியிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சைக்கோ கொலையாளி தமிழகத்திற்குள் புகுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தடா வழியாக ரெயில் மூலம் சென்னைக்குள் புகுந்து இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழக போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளூர் போலீசார் எல்லையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் நிலையங்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித் திரிகிறார்கள் என கண்காணிக்கப்படுகிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

சைக்கோ வாலிபர் பெயர் சாமிபையா என்றும் ஆந்திராவில் 2 ஆண்டுகளில் 25 பேரை கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வனத்துறையின் பிடியில் இருந்து அவன் தப்பி வந்தபோதுதான் பஸ்சில் 3 பேரை கொன்று இருக்கலாம் என்று ஆந்திர மாநில போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் கேரளாவைச் சேர்ந்த அந்தோணி என்ற சைக்கோ மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இவனும் கேரளாவில் பல கொலைகளை செய்து தப்பிவிட்டான். திருப்பூர், சித்தூர் பகுதியில் அவன் நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து அவனை பிடிக்கவும் போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பேருந்தில் 3 பேர் கொலை: தமிழக-ஆந்திர எல்லையில் சைக்கோ வாலிபர் பதுங்கல்

From எழுத்ததிகாரன்

Topic ID: 50

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...