வடவள்ளி, ஜூலை. 27-
கோவையை அடுத்த வடவள்ளி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன். லாரி டிரைவர். இவரது மனைவி நாகஜோதி(வயது22). கடந்த 3 1/2 ஆண்டுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நாகஜோதி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பாண்டியராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது பெரும் ஏமாற்றத்தை தந்தது.
2-வதாக ஏன் பெண் குழந்தை பெற்றாய்? என்று மனைவியுடன் பாண்டியராஜன் அடிக்கடி சண்டை போட்டார். நாகஜோதியின் மாமியார் சாந்தியும் அவரை திட்டி தீர்த்தார். சம்பவத்தன்று இரவும் பாண்டியராஜன் பழைய பல்லவியை பாடத்தொடங்கினார். பெண் குழந்தை பிறந்ததற்கு நான் என்ன செய்வேன்? என்று நாகஜோதி எதிர் கேள்வி கேட்டு சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் தொட்டு தாலிகட்டிய மனைவி என்றும் பாராமல் நாகஜோதியின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். இதற்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் நாகஜோதி ரத்தவாந்தி எடுத்தார். உடனே அவரை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே நாகஜோதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், அவர தாய் சாந்தியை கைது செய்தனர்.
கோவையை அடுத்த வடவள்ளி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன். லாரி டிரைவர். இவரது மனைவி நாகஜோதி(வயது22). கடந்த 3 1/2 ஆண்டுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நாகஜோதி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பாண்டியராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது பெரும் ஏமாற்றத்தை தந்தது.
2-வதாக ஏன் பெண் குழந்தை பெற்றாய்? என்று மனைவியுடன் பாண்டியராஜன் அடிக்கடி சண்டை போட்டார். நாகஜோதியின் மாமியார் சாந்தியும் அவரை திட்டி தீர்த்தார். சம்பவத்தன்று இரவும் பாண்டியராஜன் பழைய பல்லவியை பாடத்தொடங்கினார். பெண் குழந்தை பிறந்ததற்கு நான் என்ன செய்வேன்? என்று நாகஜோதி எதிர் கேள்வி கேட்டு சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் தொட்டு தாலிகட்டிய மனைவி என்றும் பாராமல் நாகஜோதியின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். இதற்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் நாகஜோதி ரத்தவாந்தி எடுத்தார். உடனே அவரை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே நாகஜோதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், அவர தாய் சாந்தியை கைது செய்தனர்.
Dinamalar.