Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
12/9/2012, 8:00 pm
அண்ணா வளைவை அகற்ற நான் உத்தரவிடவேயில்லை: ஜெயலலிதா 10-jay10
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற தான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, "பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு'' அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, "... அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்டநாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார்.

அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?...'' என்று வினவியிருக்கிறார். அதாவது சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை.

அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?. அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா?. இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, "அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது'' என்று கூறியுள்ளாரா? அல்லது அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள்ளிவிட்டு இது போன்ற கேள்வியை தனக்குத் தானே எழுப்பி பதிலளிக்கிறாரா என்பதற்கு 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தான் பதில் சொல்ல வேண்டும்.

மேம்பாலம் அமைத்திட முந்தைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத் தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா?. ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டுவிட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்!.

எது எப்படியோ, முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.

அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன். எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு' அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு' காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நடத்துனர்•••2
avatar
Sekaran Mathan
13/9/2012, 11:11 am
நீலிக்கண்ணீர் என்பதெல்லாம் பெண்கள் தானே வடிப்பார்கள்?

புரட்சித்தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் உயர்ந்த மரியாதைதான் எங்களுக்கு நல்ல்ல்லல்லாத் தெரியுமே...

முதல்ல நீங்க நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கோ... யாரோ இடிச்சாங்கலாம்... இவங்க செய்தித்தாளைப் பார்த்து இடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்களாம்... அந்த செய்தித்தாளில் வேற எந்த செய்தியும் இருந்திருக்காதோ....? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு!!

ஆமா... அண்ணா வளைவை இடிக்கிரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? செய்தித்தாளில் செய்தி வெளிவரும் வரையிலா இடித்துக் கொண்டிருக்க வேண்டும்?...

கருணாநிதி கபட நாடகம் நடத்துவதாக இருந்தால் அல்லது புரட்சித் தலைவரால் கட்டப்பட்ட அண்ணா வளைவு இருக்கக் கூடாது என்று கருணாநிதி நினைத்திருந்தால். அந்த வளைவு முழுதும் இடிக்கப்பட்ட பிறகு நாடகமாடியிருக்கலாமே...

கூடுதலா செலவு செய்யிறதுக்கு என்னென்ன வழி இருக்கோ அதையெல்லாம் நீங்க முயற்சி பண்ணுங்க. ஆனா காரணத்தை மட்டும் அடுத்தவங்க மேல தினிச்சுடுங்க...

நல்லா இருக்குதும்மா உங்க இடி! 12B பஸ்ல கூட இப்படி இடிச்சிருக்க மாட்டாங்க!

Member•••3
avatar
Selvam
13/9/2012, 11:20 am
Sekaran Mathan wrote:நீலிக்கண்ணீர் என்பதெல்லாம் பெண்கள் தானே வடிப்பார்கள்?

புரட்சித்தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் உயர்ந்த மரியாதைதான் எங்களுக்கு நல்ல்ல்லல்லாத் தெரியுமே...

முதல்ல நீங்க நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கோ... யாரோ இடிச்சாங்கலாம்... இவங்க செய்தித்தாளைப் பார்த்து இடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்களாம்... அந்த செய்தித்தாளில் வேற எந்த செய்தியும் இருந்திருக்காதோ....? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு!!

ஆமா... அண்ணா வளைவை இடிக்கிரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? செய்தித்தாளில் செய்தி வெளிவரும் வரையிலா இடித்துக் கொண்டிருக்க வேண்டும்?...

கருணாநிதி கபட நாடகம் நடத்துவதாக இருந்தால் அல்லது புரட்சித் தலைவரால் கட்டப்பட்ட அண்ணா வளைவு இருக்கக் கூடாது என்று கருணாநிதி நினைத்திருந்தால். அந்த வளைவு முழுதும் இடிக்கப்பட்ட பிறகு நாடகமாடியிருக்கலாமே...

கூடுதலா செலவு செய்யிறதுக்கு என்னென்ன வழி இருக்கோ அதையெல்லாம் நீங்க முயற்சி பண்ணுங்க. ஆனா காரணத்தை மட்டும் அடுத்தவங்க மேல தினிச்சுடுங்க...

நல்லா இருக்குதும்மா உங்க இடி! 12B பஸ்ல கூட இப்படி இடிச்சிருக்க மாட்டாங்க!
சபாஷ். சரியான கேள்வி!
தமிழ் நாட்டுல சரியா சிந்திச்சு கேள்வி கேக்குறதுக்கு யாரும் இல்லைங்கறது அந்த நாடகக்கார அம்மாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதான் கலர் கலரா ரீலா விடுறாங்க...

நான் நாடகக்கார அம்மான்னு சொன்னதை யாரும் கர்நாடகக்கார அம்மான்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சினிமால நடிச்சாங்கல்ல அதைத்தான் அப்படி சொன்னேன்...

நடத்துனர்•••4
avatar
Sekaran Mathan
13/9/2012, 11:23 am
Selvam wrote:
சபாஷ். சரியான கேள்வி!
தமிழ் நாட்டுல சரியா சிந்திச்சு கேள்வி கேக்குறதுக்கு யாரும் இல்லைங்கறது அந்த நாடகக்கார அம்மாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதான் கலர் கலரா ரீலா விடுறாங்க...

நான் நாடகக்கார அம்மான்னு சொன்னதை யாரும் கர்நாடகக்கார அம்மான்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சினிமால நடிச்சாங்கல்ல அதைத்தான் அப்படி சொன்னேன்...

பரவாயில்லையே நீங்க கூட நல்லா எழுதுறீங்களே... பாராட்டுக்கள்.!

Member•••5
avatar
Selvam
13/9/2012, 11:25 am
எழுத்ததிகாரன்ல உறுப்பினரா இருந்துகிட்டு இந்த அளவுக்குக் கூட எழுதலேன்னா எப்படி?... சும்மாவா... எழுத்ததிகாரன் எழுத்துக்களைப் படிச்சா எறும்புகூட எழுத ஆரம்பிச்சுடும்!...

நடத்துனர்•••6
avatar
Sekaran Mathan
13/9/2012, 11:29 am
Selvam wrote:எழுத்ததிகாரன்ல உறுப்பினரா இருந்துகிட்டு இந்த அளவுக்குக் கூட எழுதலேன்னா எப்படி?... சும்மாவா... எழுத்ததிகாரன் எழுத்துக்களைப் படிச்சா எறும்புகூட எழுத ஆரம்பிச்சுடும்!...

ஆஹா பிரமாதம்...! பிரமாதம்...! தொடர்ந்து எழுதுங்கள் செல்வம்.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை."

Member•••7
avatar
Selvam
13/9/2012, 11:30 am
நன்றி மதன்.

Permit Member•••8
avatar
Kavitha Banu
21/9/2012, 6:32 pm
Selvam wrote:
நான் நாடகக்கார அம்மான்னு சொன்னதை யாரும் கர்நாடகக்கார அம்மான்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சினிமால நடிச்சாங்கல்ல அதைத்தான் அப்படி சொன்னேன்...

என்ன செல்வம் இப்படிப் போட்டுத் தாக்கிடீங்க...
இதுதான் இரட்டை அர்த்த வசனம் என்பதா? பிரமாதம்...

•••9
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

அண்ணா வளைவை அகற்ற நான் உத்தரவிடவேயில்லை: ஜெயலலிதா

From எழுத்ததிகாரன்

Topic ID: 475

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...