இடிந்தகரை: இடிந்தகரை வந்துள்ள சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை ரகசியமாக சந்திக்க கூத்தங்குழி சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
கூடங்குளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு சரணடைவதாக இருந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை 50 இளைஞர்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார். அவர் முன்னிலையில் உதயகுமார் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயகுமார் இடிந்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டதையடத்து கெஜ்ரிவால் இடிந்தகரையில் உள்ள பாதிரியார் பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரகசிய இடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திக்க அவர் இன்று அதிகாலை இடிந்தகரையில் இருந்து படகு மூலம் கூத்தங்குழிக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கெஜ்ரிவாலை நேற்று இரவு சந்தித்த போலீஸ் அதிகாரிகள் உதயகுமாரை சரணடையச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் கெஜ்ரிவாலோ தான் அளித்த பேட்டியின்போது உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு சரணடைவதாக இருந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை 50 இளைஞர்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார். அவர் முன்னிலையில் உதயகுமார் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயகுமார் இடிந்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டதையடத்து கெஜ்ரிவால் இடிந்தகரையில் உள்ள பாதிரியார் பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரகசிய இடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திக்க அவர் இன்று அதிகாலை இடிந்தகரையில் இருந்து படகு மூலம் கூத்தங்குழிக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கெஜ்ரிவாலை நேற்று இரவு சந்தித்த போலீஸ் அதிகாரிகள் உதயகுமாரை சரணடையச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் கெஜ்ரிவாலோ தான் அளித்த பேட்டியின்போது உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.