Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
2/9/2012, 2:12 pm
பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கில்லாடி பெங்களூரூவில் கைதானார்!! Tamil_16
பெங்களூரூ: சென்னையில்தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து 50க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கில்லாடி பெங்களூரூவில் கைது செய்யப்பட்டார். இவள்தான் நமக்கு மனைவி என்று ஏமாந்த கணவர்கள் பலரும் புகார் கொடுத்ததோடு இந்த பெண்ணுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரியுள்ளனர். பெண்கள் தான் ஏமாற்றப்படும் கதை கேட்டிருக்கின்றோம். ஆனால் இந்த செகாநாத் என்ற பெண் ஆண்களை மிஞ்சிய பெண் கில்லாடியாகி விட்டார். இனி ஆண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தியவள்:

"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத் ( வயது 25 ) . இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.

வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்தியவர்:

யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் "டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.

செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை பெற்ற கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படையினர் செகாநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூரூவில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கில்லாடி பெங்களூரூவில் கைதானார்!!

From எழுத்ததிகாரன்

Topic ID: 453

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...