நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
30/8/2012, 5:25 am
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.எஸ்.வி.,க்கு பத்ம விருது மறுப்பு: ஜெ., Tamil_News_large_537820
"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, பத்ம விருதை வழங்க, மத்திய அரசு மறுத்து விட்டது,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயா "டிவி'யின், 14ம் ஆண்டு விழாவும், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பாராட்டு விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அரசியல் ரீதியான எதிரிகள், மத்திய அரசின் தொல்லைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், வெளியேயும் எதிரிகள், உள்ளேயும் சதிகள் என, அனைத்தையும் எதிர்கொண்டு, ஜெயா "டிவி' எதிர் நீச்சல் போடுகிறது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்; 13 வயதில் மேடை கச்சேரி நிகழ்த்தியவர்; 700க்கும் மேற்பட்ட, திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்; 300 இசைக் கருவிகளைக் கொண்டும் இசையமைத்தவர்; மூன்று இசைக் கருவிகளைக் கொண்டும் இசை அமைத்தவர்; 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளவர். சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள், இவர் குழுவில் சேர்ந்ததும், சாப்பிட நேரமின்றி இருந்தனர். இவரது இணையான ராமமூர்த்தி, பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர்; வயலின் வித்வான். நுண்ணிய ஒலிகளைக் கூட, மிக நுட்பமாக, இசையில் சேர்த்தனர்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இவர்களது இசை தான் என் நெஞ்சில் நிறைந்துள்ளது.

இன்றைய இசைப் போட்டிகளில், பங்கேற்கும் சிறுவர், சிறுமிகள் கூட, எம்.எஸ்.வி., பாடல்களைத் தான், தேர்வு செய்து பாடுகின்றனர். தொலைக்காட்சி, டேப் ரெக்கார்டர், கணினி, சி.டி., டி.வி.டி., இல்லாத காலத்திலேயே, இவர்கள் கொடி கட்டிப் பறந்தவர்கள். சங்கீதம் தெரியாதவர்கள் கூட, இவர்களது பாடல்களை அனுபவித்த அளவுக்கு, இனிமையாக இசையமைத்தவர்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் காலம் தான், தமிழ்த் திரை இசையின் பொற்காலம். இப்படி புகழ் பெற்ற இவர்கள், பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், தேசிய அளவிலான பத்ம விருது, கிடைக்காதது வருத்தமாக உள்ளது.

சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுக்கு, விஸ்வநாதன் பெயரை பரிந்துரைத்தேன். ஆனால், மாநில அரசுக்கு எதிரான கருத்துடைய மத்திய அரசு, இதற்கு செவி சாய்க்கவில்லை. "ஜனாதிபதி விருது வேண்டாம்; ஜனங்களின் விருதே போதும்' என, எம்.எஸ்.வி., கூறினாலும், நான் சொன்னால், விருதை அளிக்கும் காலம் கனியும்; அப்போது, இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன். இசையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, இசைப் பயிற்சியை அளித்து, சிறந்த இசைப்பாளர்களையும், பாடகர்களையும் எம்.எஸ்.வி., உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

முன்னதாக, விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி' என்ற பட்டத்தையும், விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு, 60 பொற்காசுகள் கொண்ட, பொற்கிழியையும் ஜெயலலிதா வழங்கினார்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.எஸ்.வி.,க்கு பத்ம விருது மறுப்பு: ஜெ.,

From எழுத்ததிகாரன்

Topic ID: 421

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...