Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
27/8/2012, 1:33 pm
நாகர்கோவில்: நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
27/8/2012, 1:36 pm
சென்னை: நிச்சயம் செய்த பிறகு தன்னுடன் ஒருமாதம் ஒன்றாக வசித்த இயக்குநர் ரவிக்குமார், திருமணத்துக்கு மறுத்து திடீரென்று ஓடிவிட்டதால்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் கசிந்துள்ளது.

அய்யாவழி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஜிபாலா. கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கிச்சா வயது 16, ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் வைத்தியநாதபுரம். தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

சுஜிபாலாவின் பெற்றோரை ரவிக்குமார் சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் பெற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 5-ந்தேதி சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஈத்தாமொழி அருகே உள்ள கொய்யன் விளையில் நடந்தது. நடிகைகள் ஷகீலா, கும்தாஜ், பாபி லோனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

அப்போது திருமணத்தை திருச்செந்தூர் கோவிலில் இன்று நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சுஜிபாலா நேற்று முன்தினம் திடீரென அதிக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதை மறுத்தனர். காய்ச்சல் காரணமாகத்தான் சுஜிபாலா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறினர்.

ஆனால் இப்போது பலவித தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் திடீரென மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியுள்ளது. சுஜிபாலா சம்மதத்துடனேயே நிச்சயதார்த்தம் நடந்ததாம். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக இருவரும் கணவன் மனைவியாகவே வசித்தார்களாம். ஆனால் இப்போது ரவிக்குமார் மனம் மாறி திருமணத்துக்கு மறுப்பு சொன்னதால் தற்கொலைக்கு முயன்றார் என்கிறார்கள்.

நிச்சயதார்த்ததுக்கு முன்பே சுஜிபாலாவுக்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது தெரிந்ததால் இயக்குநர் திருமணத்துக்கு மறுத்து ஓடிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

சுஜிபாலா தற்கொலை முயற்சி காரணமாக திருச்செந்தூரில் நடக்க இருந்த திருமணம் நின்றது.

நடத்துனர்•••3
avatar
Sekaran Mathan
28/8/2012, 1:53 pm
சென்னை: நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தலைவலிக்காக மருத்துவமனைக்குப் போனதை, தற்கொலை முயற்சி என்று சொல்லிவிட்டார்கள் தடாலடியாகக் கூறியுள்ளார் நடிகை சுஜிபாலா.

அய்யாவழி, சந்திரமுகி உள்ளிட்ட சுஜிபாலா, நேற்று அளவுக்கதிகமாக தூக்கமாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறி நாகர்கோயிலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த இவர் 'உண்மை' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் கடந்த ஜுலை 5-ந்தேதி குமரி மாவட்டம் ஈத்தாமொழியில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தில் பிரச்சினை என்பதால்தான் சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்த சுஜிபாலா நிருபர்களிடம் கூறியதாவது:
நான் தற்கொலை செய்ய முயலவில்லை. தலைவலி மற்றும் காய்ச்சலாக இருந்ததால் எனது தாயாரிடம் மாத்திரை கேட்டேன். அவர் நீயே எடுத்துக்கொள் என கூறிவிட்டார். நான் மாத்திரை தெரியாமல் பவர் கூடிய 2 மாத்திரைகளை தின்றுவிட்டேன். இதனால் மயக்கமடைந்து விழுந்தேன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டேன்.

சினிமா துறையில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கும், நடன இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்பதெல்லாம் உண்மை இல்லை. எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாகவில்லை. முடிவானதும் பத்திரிகைகள், மீடியாக்களிடம் தெரிவிப்போம். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.

நான் தற்போது டைரக்டர் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

நடத்துனர்•••4
avatar
Sekaran Mathan
28/8/2012, 1:54 pm
சென்னை: நடிகை சுஜிபாலாவை மணக்க புதிய இயக்குநர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே திட்டமிட்டபடி திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடக்கிறது.
நடிகை சுஜிபாலாவுக்கும், இயக்குனர் ரவிக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. திருச்செந்தூர் கோவிலில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்தைய நாள் சுஜிபாலா திடீரென அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று மயங்கி விழுந்தார்.

அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் பிடிக்காமல்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
இன்னும் சிலர் சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் மறுத்து விட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறினார்.

அதற்கு வலு சேர்ப்பது போல மருத்துவமனையில் இருந்த சுஜிபாலாவை ரவிக்குமார் நேரில் போய் உடல் நலம் கூட விசாரிக்கவில்லை. இருமாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சுஜிபாலா சிகிச்சை முடிந்து நிருபர்களைச் சந்தித்தார்.

தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், தெரியாமல் மாத்திரைகளை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறினார். "டைரக்டர் ரவிக்குமாருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் திருமணம் அக்டோபரில் நடக்கும். திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்", என்றும் சுஜிபாலா கூறினார்.

இதற்கிடையே,சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள இயக்குனர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தனக்காக தூக்க மாத்திரை சாப்பிடும் அளவுக்குப் போன சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் என்று அவர் கூறியுள்ளாராம்.

•••5
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

நடிகை சுஜிபாலா தற்கொலை முயற்சி

From எழுத்ததிகாரன்

Topic ID: 385

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...