நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
28/8/2012, 12:02 am
மின் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின் நுகர்வை குறைக்கும் முயற்சியில் மின் வாரியம் இறங்கியுள்ளது.
பல்வேறு முக்கிய வாழ்வாதாரங்கள் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தமிழக மக்கள் இருக்கின்றனர்.

மழை இல்லாததால் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு, மின் உற்பத்தி குறைந்ததால் மின் தட்டுப்பாடு என தட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில், தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் ஒரே விஷயம் மின்சாரம். மின்சாரம் சரியாக கிடைக்காமல், தொழில்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த, 2001ம் ஆண்டு இதே அ.தி.மு.க., ஆட்சியின் போது மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது பற்றாக்குறையில் தவித்து வருகிறது.இதற்கு, மின் உபயோகத்தின் அளவு அதிகரித்துள்ளதே காரணம் என்று கூறினாலும், ஆட்சியாளர்களால், மின் உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்தாக உள்ளது. தமிழகத்திற்கு தற்போது, 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பது, 7,500லிருந்து 8,000 மெகாவாட் மின்சாரம் தான்.

தனிமனித நுகர்வு:

மின் உற்பத்தி குறையும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால், குறிப்பிட்ட சில மணி நேர மின் தடையுடன் மின்வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது. மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், தற்போது மின் தேவையை கட்டுப்படுத்தும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. அப்படியானால், இனி மின் இணைப்பு கொடுப்பதில்லை என ஒரேடியாக முடிவெடுக்கவில்லை. அது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். மின் சேமிப்பை ஊக்குவித்தல், மின் திருட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிமனித மின்நுகர்வு அதிகமாக, அதாவது ஆண்டிற்கு, 1,080 யூனிட் என்ற அளவில் உள்ளது. மற்ற மாநிலங்களில், 800 யூனிட் மின்சாரம்தான் தனிமனித நுகர்வாக உள்ளது. மேலும், குறைந்த கட்டடணத்தில் மின்சாரம் வழங்கப்படுவதும் தமிழகத்தில் தான். இதனால்தான், மின்சாரம் அதிகளவில் வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நாளுக்கு நாள் தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மின் தேவை அதிகரிக்கும்.இதை சமாளிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்தாலும், உற்பத்திக்கு தேவைப்படும் காலம் அதிகமாக இருப்பதால், தேவைகளை உடனடியாக சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து, மக்கள் மத்தியில் மின் சேமிப்பு, மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மின்துறை ஏற்படுத்தி வருகிறது. விழிப்புணர்வு வார விழாவை துவக்கிய மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் முதல்கட்டமாக பள்ளி மாணவர்களிடையே மின் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் திருட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பற்றாக்குறை:

இதற்கான துவக்க விழாவில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜிவ் ரஞ்சன் பேசியதாவது:தமிழகத்தில் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை. தற்போது மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், உற்பத்தியை அதிகரிக்க மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடம், மூலப்பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. ஒரு 500 முதல் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் ஆரம்பிக்க ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது. இவற்றிற்கு மூலப்பொருட்களை மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் நாம் கொண்டு வர வேண்டும்.இதற்காகத் தான், நுகர்வை குறைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம். நுகர்வை குறைப்பதென்றால் மின் சிக்கனம் தேவை. இதற்காக குடிசை வீடுகளில் குண்டு பல்பிற்கு பதிலாக, சி.எப்.எல்., பல்புகளை வழங்க உள்ளோம்.

அதிக முதலீடு:

மேலும், குறைந்த மானிய விலையில் பல்புகள் வழங்கவும் முடிவெடுத்து, துவக்கப்பட உள்ளது. மின் திருட்டை பொறுத்தமட்டில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேமிப்பு, மின் திருட்டு குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023ல் மின் உற்பத்திக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை கொண்டு வருதல் மற்றும் வினியோகித்தலுக்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மின்உற்பத்தி திட்டத்தை நெறிமுறைப்படுத்துவதுடன், அதிகளவு முதலீட்டை பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

- தினமலர் நிருபர்

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

மின் தடையை சமாளிக்க இனி விழிப்புணர்வு தான் வழி!

From எழுத்ததிகாரன்

Topic ID: 398

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...