உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது இந்த ஆண்டுக்கான 30-வது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் நாளை கோலாகலமாக நடக்கிறது.
இந்நிலையில் விழாவையொட்டி நடக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் இந்தியாவின் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். லண்டனில் உள்ள சவுத்வாக் பகுதியில் இன்று நடைபெறும் சுடர் ஓட்டத்தில் அவர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கிறார். அவர் சுடரை ஏந்தி செல்லும் இடம் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.
ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் பெருமை தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டுவிட்டரில் அமிதாப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விழாவையொட்டி நடக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் இந்தியாவின் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். லண்டனில் உள்ள சவுத்வாக் பகுதியில் இன்று நடைபெறும் சுடர் ஓட்டத்தில் அவர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கிறார். அவர் சுடரை ஏந்தி செல்லும் இடம் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.
ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் பெருமை தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டுவிட்டரில் அமிதாப் தெரிவித்துள்ளார்.