கேள்விகளுக்கான
பதில்
ஒன்றுமில்லையென
ஒலித்துச்
சிதறுகின்றன எப்பொழுதும்
அது
மன வெளியின்
அழுத்தங்களற்று
மிதந்து நகர்கின்றது
அன்பு
நட்பு
காதல்
காமம்
அனைத்தும் ஒற்றைச் சொல்லில்
வெளிப்பட இயலாது
மௌனத்தில்
உறைந்து கிடக்கின்றது.
-சக்தி ஜோதி ( http://sakthijothi.wordpress.com )