திண்டுக்கல் : ஆசிரியை கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்தவர் கோகிலப்பிரியா,33. பூலத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியை. இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகியும், பழம்புத்தூர் ஊராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான லாரன்சிடம், கோகிலப்பிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த, மே 4ம் தேதி, பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறிய அவர், தன்னை கற்பழித்ததாக, திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில், கோகிலப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். புகார் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டார். லாரன்ஸ் மீது இன்ஸ்பெக்டர் அனார்கலி வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கடந்த, மே 4ம் தேதி, பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறிய அவர், தன்னை கற்பழித்ததாக, திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில், கோகிலப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். புகார் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டார். லாரன்ஸ் மீது இன்ஸ்பெக்டர் அனார்கலி வழக்குப் பதிவு செய்துள்ளார்.