புதுமுக எழுத்தாளர்•••1
avatar
சொல்லதிகாரன்
20/8/2012, 3:13 am
காஞ்சிபுரம்:மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், கர்ப்பிணிகள் அல்லாடி வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் இப்படி ஒரு அவலமான சூழ்நிலை நிலவுகிறது. மகப்பேறு மருத்துவர்களை நியமித்தால் கூடுதல் செலவாகும் என்று அதிகாரிகள் அதை தவிர்த்து வருவதாக தெரிகிறது.

மாவட்டத்தில், திருப்புட்குழி, வாலாஜாபாத், மதுரமங்கலம், குன்றத்தூர், மானாம்பதி, அச்சிறுப்பாக்கம், ஜமீன்எண்டத்தூர், ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. எல்லா வசதிகளும் உண்டு இவற்றில், தலா 30 படுக்கைகள் உள்ளன. இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை வசதி, ஸ்கேன் கருவிகள், பிரசவ அறுவை சிகிச்சையின்போது தேவைப்படும் ரத்தத்தை வழங்க ரத்த சேமிப்பு வங்கி மற்றும் 24 மணி நேரம் பிரசவம் பார்ப்பதற்கு சுழற்சி முறையில் பணிபுரிய செவிலியர்கள் உள்ளனர். அறுவை சிகிச்சையின் போது, மின் தடை ஏற்பட்டால் சமாளிக்க, நவீன ரக ஜெனரேட்டர் உள்ளது.

இது தவிர, பல் மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிற்கான மருத்துவர்களும் உள்ளனர். மகப்பேறு மருத்துவர் இல்லைகடந்த 1981 ம் ஆண்டு பொது மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஓய்வு பெற்ற பின், இந்த இடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், பொரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடிவதில்லை. மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொது மருத்துவம் படித்த மருத்துவர்களே பிரசவம் பார்க்கின்றனர். மேலும், அவசர காலங்களில், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர்கள் வரவழைக்கப் படுகின்றனர். இவர்கள் வரும் வரை, கர்ப்பிணிகள் பிரசவ வலியோடு காத்திருக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

இதுகுறித்து, சுகாதார துறையின், துணை இயக்குனர், கிருஷ்ணராஜ் கூறும்போது, "ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவர்களை நியமித்தால், கூடுதல் செலவாகும் என்பதால்; மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும், பொது மருத்துவம் படித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்,''

நிதி பற்றாக்குறை?

மேலும், "அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, தனியார் மருத்துவர்களை அழைத்துக் கொள்ளலாம், என, அந்த திட்டத்தில் தளர்வு சலுகை அளிக்கப் பட்டு உள்ளது.
மகப்பேறு மருத்துவர்கள் இல்லாத நிலையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது,'' என்றார். திட்டம் என்ன கூறினாலும், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க, சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கு.க.,வுக்கு காத்திருப்பு:

ஆரம்ப சுகாதார நிலையங்களில், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு, பிரசவத்தின் போதே குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. சுகப் பிரசவமாகும் பெண்களுக்கு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பிரசவம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு மேற்கொள்ளப்படுகிறது.

அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லாததால், சில நேரங்களில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து, செவிலியர் ஒருவர் கூறும் போது, " வட்டார ஆரம்பசுகாதார நிலையங்களில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்கின்றனர். இங்கு மருத்துவர் இல்லாததால், தனியார் மருத்துவர் தேதி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிஉள்ளது,' என்றார்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஆரம்ப சுகாதர நிலையங்களில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை

From எழுத்ததிகாரன்

Topic ID: 334

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...