புதுமுக எழுத்தாளர்•••1
avatar
சொல்லதிகாரன்
20/8/2012, 2:43 am
கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டும்-பிரதமருக்கு மீண்டும் ஜெ. கோரிக்கை 19-jayalalitha-45-300
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கேத் தர வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே அவர் 2 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் இதுவரை அவர் பதில் தரவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த முறை ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் யூனிட்டில் இருந்து தயாரிக்கப்படும் 1000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்குத் தர வேண்டும் என்று நான் முன்னர் எழுதிய 2012 மார்ச் 31 மற்றும் 2012 ஏப்ரல் 25ம் தேதியிட்ட இரு கடிதங்கள் குறித்து நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இதுவரை தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கிறது என்பதை அறிந்தேன். இந்த நிலையில், முன்னர் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவற்றுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காவது பிரதமர் பதிலளிப்பாரா அல்லது வழக்கம் போல கம்மென்று இருப்பாரா என்று தெரியவில்லை.

புதுமுக எழுத்தாளர்•••2
avatar
சொல்லதிகாரன்
20/8/2012, 3:02 am
சென்னை:"கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும்' என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,"டம்மி பியூல்' எனப்படும் மாதிரி எரிபொருள் நிரப்பி, பின் அவற்றை அகற்றி, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து விட்டன. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், யுரேனியம் எரிபொருள் நிரப்ப, இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அனுமதியும் வழங்கியுள்ளது.

மூன்றாவது முறை:

இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள், அடுத்த சில நாட்களில் நிரப்பும் பணி துவக்கப்பட இருக்கிறது. "இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும்' என, பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மீண்டும் அதை வலியுறுத்தும் வகையில் மூன்றாவது முறையாக நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க தாங்கள் உதவ வேண்டும் எனக் கோரி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களுக்கு தங்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. கூடங்குளம் அணு மின் நிலைய முதல் யூனிட்டில், அடுத்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்க இருப்பதாக நான் அறிகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் என் முந்தைய வேண்டுகோளை தங்களுக்கு நினைவுபடுத்தி, விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில்முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பு:

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால், தமிழகத்தில் தற்போது மின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தேவைக்கேற்ப மின் வினியோகத்தை வழங்குவதில், மின் வாரியம் தடுமாறி வருகிறது. இந்நிலையில், "கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும்' என முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில், தற்போதைய தமிழகத்தின் அவசரத் தேவையை புரிந்து கொண்டு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டும்-பிரதமருக்கு மீண்டும் ஜெ. கோரிக்கை

From எழுத்ததிகாரன்

Topic ID: 331

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...