சென்னை:"அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதிக்கு, அனுசரணையாக போலீசார் நடக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீதான வழக்கில், "ஜூலை, 9ம் தேதி, கண்டிப்பாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்கிறோம்' என, போலீஸ் தரப்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. ஜூலை, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரிக்கும், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர், விடுமுறையில் சென்று விட்டார்; பரஞ்ஜோதியின் கையெழுத்து பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்ற காரணம் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஒரு மாதம் கழிந்த பின், கடந்த, 17ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், போலீசார் பரஞ்ஜோதியின் கையெழுத்தை சரிபார்க்க, சென்னை தடவியல் துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கை முடிவு, இன்னும் கிடைக்கவில்லை என்பதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நிருபர்களிடம் கூறும்போது, "அவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், பரஞ்ஜோதியிடமிருந்து மறைமுகமாக மிரட்டல் வருவாகவும், நான் தூங்கியே பல மாதங்களாகி விட்டன என்றும், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்தபடி வாழ்வதாகவும்' சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை எந்த அளவிற்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணையாக நடக்கிறது என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீதான வழக்கில், "ஜூலை, 9ம் தேதி, கண்டிப்பாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்கிறோம்' என, போலீஸ் தரப்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. ஜூலை, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரிக்கும், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர், விடுமுறையில் சென்று விட்டார்; பரஞ்ஜோதியின் கையெழுத்து பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்ற காரணம் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஒரு மாதம் கழிந்த பின், கடந்த, 17ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், போலீசார் பரஞ்ஜோதியின் கையெழுத்தை சரிபார்க்க, சென்னை தடவியல் துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கை முடிவு, இன்னும் கிடைக்கவில்லை என்பதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நிருபர்களிடம் கூறும்போது, "அவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், பரஞ்ஜோதியிடமிருந்து மறைமுகமாக மிரட்டல் வருவாகவும், நான் தூங்கியே பல மாதங்களாகி விட்டன என்றும், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்தபடி வாழ்வதாகவும்' சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை எந்த அளவிற்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணையாக நடக்கிறது என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.