Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
2/8/2012, 2:20 pm
நீதிபதி: கள்ள நோட்டு அடிச்சியா ?

குற்றவாளி: இல்ல யுவர் ஆனர், நான் அடிச்ச நோட்டு கவர்மெண்டு நோட்டு மாதரியே இருந்ததாம்!

நீதிபதி: சரிதான், நீ அடிச்ச நோட்டு அப்படியே கவர்மெண்டு நோட்டு மாதறியே தான் இருக்கு. ஆனா, கவர்னர் கையெழுத்துக்குப் பதிலா உன்னோட கையெழுத்தை போட்டதால தான் நீ மாட்டிகிட்டே.

குற்றவாளி: என்னோட நேர்மைக்கு கிடைச்ச பரிசு இதுதான் யுவர் ஆனார்! அதனாலதான் இனிமே நேர்மையா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்.

நீதிபதி: என்ன நேர்மை? கள்ள நோட்டு அடிச்சது நியாயம்னு சொல்ல வரியா?

குற்றவாளி: இது நியாயமான்னு நீங்களே கேளுங்கள் யுவர் ஆனார். அடுத்தவங்க கையெழுத்தைப் போடுறது கிரிமினல் குற்றம்னுதான் நான் என்னோட கையெழுத்தையே போட்டேன். ஆனா, அதையும் குற்றம்னு சொன்னா எப்படி?

நீதிபதி: இந்த சட்ட விரோத செயலை செய்வதற்கு உனக்கு யாரு அனுமதி கொடுத்தது?

குற்றவாளி: எங்க குடும்பத்துல உள்ளவங்க பேருல பணம் இருந்துச்சு. அதான் இந்த உரிமையை நமக்கு இருக்குன்னு நெனைச்சிட்டேன்.

நீதிபதி: உங்க குடும்பத்துல உள்ளவங்க பேரு என்ன?

குற்றவாளி: எங்க அப்பா பேரு செல்வம்!

நீதிபதி: !!!!!!!!

குற்றவாளி: எங்க அம்மா பேரு சொப்'பண' சுந்தரி!

நீதிபதி: !!!!!!

குற்றவாளி: என்னோட தம்பி பேரு பிர'காசு'!

நீதிபதி: !!!!!!!!!!

குற்றவாளி: என்னோட அக்கா பேரு அஞ்சணா!

நீதிபதி: அப்படின்னா... உன்னோட தங்கச்சி பேரு என்ன நாலணா'வா?

குற்றவாளி: இல்லை யுவர் ஆனர், என் தங்கச்சி பேரு ரூபா!

நீதிபதி: உங்க தாத்தா பேரு என்ன?

குற்றவாளி: தாத்தா பேரு பெரு'மாளு'!

நீதிபதி: உங்க பாட்டி பேரு?

குற்றவாளி: பாட்டி பேரு... நவ'மணி'!

நீதிபதி: இவ்வளவு சொல்றியே உன்னோட பேரு மட்டும் ஏன் அசுரன்'னு வச்சிருக்கே. இதுல பணமோ, காசோ இல்லையே?

குற்றவாளி: இருக்கு யுவர் ஆனர்! என்னோட முழுப் பேரு நர'காசு'ரன்!

நீதிபதி: அடப்பாவி!

குற்றவாளி: இது மட்டுமில்ல யுவர் ஆனர், என்னோட பொண்டாட்டி பேருலயும் இந்த ஒற்றுமை இருக்கு.!

நீதிபதி: உன் பொண்டாட்டி பேரு என்ன?

குற்றவாளி: ஈஸ்'வரி'!

நீதிபதி: இந்த வழக்கை விசாரித்ததில் ஏதோ நியாயம் இருப்பது போல தோன்றுவதால், பலபேர் கொண்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக இவருடைய வழக்கை அடுத்தமாதம் 15-ம் தேதிவரை 'ஒத்தி' வைக்கிறேன்.

குற்றவாளி: என்னோட வழக்கை நீங்க ஏன் 'ஒத்தி' வைக்கணும்? என்கிட்டே குடுத்தா நான் ஒரு மாதம் 'அடகு' வச்சிக்கரேனே?...

நீதிபதி: இவன் மேல கூடுதலா இன்னொரு அஞ்சாறு 'காசை'ப் போட்டு உள்ளே தள்ளுமாறு உத்தரவிடுகிறேன்!

குற்றவாளி: அது காசு இல்லை யுவர் ஆனர், கேசு....!

நீதிபதி: போடா லூசு!

குற்றவாளி: ஆமா..., எதை வச்சி யுவர் ஆனர் என்மேல கூடுதலா கேசு போட சொல்றீங்க?

நீதிபதி: ஆங்... சேட்டு கடையில அடகு வச்சிதான்!

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

சும்மா சிரிச்சுப் பாருங்க...

From எழுத்ததிகாரன்

Topic ID: 88

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...