அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே, 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, கு.வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, 38. ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன், தன் மனைவி விஜயலெட்சுமி பெயரில், வல்லம் கிராமத்தில் ஏழரை சென்ட் வீட்டுமனை கிரையத்துக்கு வாங்கினார்.
மேற்கண்ட மனைக்கான பத்திரபதிவு முடிந்த நிலையில், அதை அளந்து சப் டிவிஷன் செய்து தர வேண்டும் என, ஜெயங்கொண்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட ஜெயங்கொண்டம் தாசில்தார், அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, குவாகம் பிர்கா சர்வேயர் மணிமொழியிடம் கூறினார்.விஜயலெட்சுமி பெயரில் உள்ள வீட்டுமனையை அளந்து சப் டிவிஷன் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, கருணாநிதியிடம், சர்வேயர் மணிமொழி கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத டிரைவர் கருணாநிதி, இதுபற்றி திருச்சியிலுள்ள லஞ்ச ஒழிப்புதுறை போலீஸில் தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சிலம்பரசன் உள்ளிட்ட போலீஸாரின் அறிவுரைப்படி, நேற்று காலை, 10 மணிக்கு குவாகம் பஸ் ஸ்டாப்பில் வைத்து, சர்வேயர் மணிமொழியிடம், 2,500 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், மணிமொழியை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார், நேற்று மாலை, 5.30 மணியளவில் அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.மணிமொழியை, வரும், 31ம் தேதி வரை, சிறையிலடைக்கும்படி நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். மணிமொழி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கண்ட மனைக்கான பத்திரபதிவு முடிந்த நிலையில், அதை அளந்து சப் டிவிஷன் செய்து தர வேண்டும் என, ஜெயங்கொண்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட ஜெயங்கொண்டம் தாசில்தார், அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, குவாகம் பிர்கா சர்வேயர் மணிமொழியிடம் கூறினார்.விஜயலெட்சுமி பெயரில் உள்ள வீட்டுமனையை அளந்து சப் டிவிஷன் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, கருணாநிதியிடம், சர்வேயர் மணிமொழி கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத டிரைவர் கருணாநிதி, இதுபற்றி திருச்சியிலுள்ள லஞ்ச ஒழிப்புதுறை போலீஸில் தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சிலம்பரசன் உள்ளிட்ட போலீஸாரின் அறிவுரைப்படி, நேற்று காலை, 10 மணிக்கு குவாகம் பஸ் ஸ்டாப்பில் வைத்து, சர்வேயர் மணிமொழியிடம், 2,500 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், மணிமொழியை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார், நேற்று மாலை, 5.30 மணியளவில் அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.மணிமொழியை, வரும், 31ம் தேதி வரை, சிறையிலடைக்கும்படி நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். மணிமொழி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.