திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையம் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில், ஆயிரத்து 583 தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.இவர்களில் கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரத்து, 475 தொழிலாளர்கள் மட்டும் அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 625 தொழிலாளர்கள் அடையாள அட்டைக்காக ஃபோட்டோ எடுத்தனர்.ஃபோட்டோ எடுப்பதற்கான தொகையை அரசு வழங்கியது. விடுபட்ட 850 தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்துக்கு ஏற்ப வெளியில் ஃபோட்டோ எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.நேற்று முன்தினம் காந்தப்பாளையம் பஞ்சாயத்து மதுரா சீனந்தல் ஏரியில் கால்வாய் தூர் வாரும் பணி நடந்தது.
அப்போது, பஞ்சாயத்து செயலாளர் நாராயணசாமி வீடுபட்டவர்கள் ஃபோட்டோ எடுக்க ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து தலா 30 ரூபாய் வசூல் செய்தார்.இதற்கு பஞ்சாயத்து தலைவர் அயோத்தி உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதை கண்டித்து தொழிலாளர்கள் காந்தப்பாளையம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலாடி போலீஸார் , பி.டி.ஓ., பிரபாகர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, "ஃபோட்டோ எடுக்க வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்கவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது, பஞ்சாயத்து செயலாளர் நாராயணசாமி வீடுபட்டவர்கள் ஃபோட்டோ எடுக்க ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து தலா 30 ரூபாய் வசூல் செய்தார்.இதற்கு பஞ்சாயத்து தலைவர் அயோத்தி உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதை கண்டித்து தொழிலாளர்கள் காந்தப்பாளையம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலாடி போலீஸார் , பி.டி.ஓ., பிரபாகர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, "ஃபோட்டோ எடுக்க வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்கவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.