கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி காவேரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனிரத்தினம். இவரது மனைவி சுமதி, 21. இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை அடுத்த பாலிகானூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சுமதி சென்றார். ஒரு நாள் தங்கிவிட்டு நேற்று முன்தினம் மாலை சுமதி காவேரிக் கொட்டாயுக்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது கணவர் முனிரத்தினம் தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டதாக கூறி சுமதியிடம் தகராறு செய்துள்ளார். மனமுடைந்த சுமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., முனிரத்தினம் விசாரிக்கின்றார். சுமதிக்கு திருமணமாகி இரு ஆண்டுகள் ஆவதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., சதீஷ் விசாரிக்கிறார்.
அப்போது, அவரது கணவர் முனிரத்தினம் தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டதாக கூறி சுமதியிடம் தகராறு செய்துள்ளார். மனமுடைந்த சுமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., முனிரத்தினம் விசாரிக்கின்றார். சுமதிக்கு திருமணமாகி இரு ஆண்டுகள் ஆவதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., சதீஷ் விசாரிக்கிறார்.