மாமல்லபுரம் : கூவத்தூர் அருகே உள்ள நியாயவிலைக் கடையை, இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிழக்கு கடற்கரைச் சாலையில், பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கூவத்தூர் அருகே முகையூரில், நடுத்திட்டு பட்டரை பகுதியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கடைக்கு, முகையூர் ஊராட்சி அலுவலகம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடையை புதிய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, தற்போது கடை உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடையை மாற்றக்கூடாது, என வலியுறுத்தி நேற்று காலை 9.30 மணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில், திடீர் சாலை மறியல் செய்தனர். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் கூவத்தூர் காவல் துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர். செய்யூர் வட்டாட்சியர் ஜூலி, இரு கடைகளாக பிரிக்க உத்தரவிட்டார். அதை ஏற்று அனைவரும் 10 மணிக்கு கலைந்து சென்றனர். திடீர் மறியலால், அப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கடைக்கு, முகையூர் ஊராட்சி அலுவலகம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடையை புதிய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, தற்போது கடை உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடையை மாற்றக்கூடாது, என வலியுறுத்தி நேற்று காலை 9.30 மணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில், திடீர் சாலை மறியல் செய்தனர். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் கூவத்தூர் காவல் துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர். செய்யூர் வட்டாட்சியர் ஜூலி, இரு கடைகளாக பிரிக்க உத்தரவிட்டார். அதை ஏற்று அனைவரும் 10 மணிக்கு கலைந்து சென்றனர். திடீர் மறியலால், அப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.