ஈரோடு: "சுசி' ஈமு நிறுவன உரிமையாளர் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும், 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பெருந்துறையில், "சுசி' ஈமு நிறுவனத்தை நடத்தி வந்தவர் குரு. அதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு பெற்று, இவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. குரு தலைமறைவானார்.
டி.ஆர்.ஓ., கணேஷ், எஸ்.பி., பொன்னி, ஆர்.டி.ஓ., சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
நிறுவன உரிமையாளர் குரு உள்பட 12 பேர் மீது, பெருந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே, 2,500க்கும் மேற்பட்டோர், "சுசி' ஈமு மீது புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும், 1,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
குரு சார்பில், அவரது வக்கீல் மோகன், ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் கிருஷ்ணசாமி ஆஜராகி, போலீஸாரிடமிருந்து கூடுதல் விபரங்கள் கேட்டுள்ளதாகவும், மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதையடுத்து, விசாரணையை வரும், 21ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., கணேஷ், எஸ்.பி., பொன்னி, ஆர்.டி.ஓ., சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
நிறுவன உரிமையாளர் குரு உள்பட 12 பேர் மீது, பெருந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே, 2,500க்கும் மேற்பட்டோர், "சுசி' ஈமு மீது புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும், 1,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
குரு சார்பில், அவரது வக்கீல் மோகன், ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் கிருஷ்ணசாமி ஆஜராகி, போலீஸாரிடமிருந்து கூடுதல் விபரங்கள் கேட்டுள்ளதாகவும், மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதையடுத்து, விசாரணையை வரும், 21ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.