பாலமேடு: மதுரையில் இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக, வறண்ட கண்மாய்களில் வண்டல் மண் சேகரித்து வயல்களில் பரப்புகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 900 கண்மாய்கள் உள்ளன. பராமரிப்பு இன்றியும், வரப்பு கால்வாய்களில் அடைப்புகள் நீக்கப்படாமல் இருப்பதாலும், மழை பெய்தாலும் பல கண்மாய்கள் நிரம்புவதில்லை. எனினும், அந்தந்த பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் சேகரித்து பாசன வசதி பெறுகின்றனர். சில நிலங்களில் கிணற்று நீரை பயன்படுத்தியும் விவசாயம் நடக்கிறது.
விவசாயிகளின் நண்பன்: பசுமை புரட்சிக்காக ரசாயன உரங்களை பயன்படுத்தினர். இதனால், மண் வளம் முழுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களுக்கு செழுமை சேர்க்கும் நுண்ணுயிர்களை ராசாயன உரங்கள் அழிந்து வருகின்றன. இதைத்தடுக்கும் வகையில், "விவசாயிகளின் நண்பன்'
என அழைக்கப்படும் மண்புழுக்களை வளர்த்து, "மண்புழு உரம்' தயாரித்து வயல்களில் பயன்படுத்துகின்றனர். தென்மேற்கு பருவமழை முழுமையாக பெய்யாததால் கண்மாய்கள் வறண்டு விட்டன. இங்கு கிடைக்கும் வண்டல் மண்ணில் நுண்ணுயிர் சத்துக்கள் மிகுந்துள்ளன. இவற்றை விவசாயிகள் சேகரித்து வயல்களில் பரப்புகின்றனர். இதனால் மண்வளம் காக்கப்படுகிறது.
தடை செய்யக்கூடாது: கண்மாய்களை பொதுப்பணித்துறையினர் பராமரிக்கின்றனர். எனினும்,
ஓரிரு கண்மாய்கள் மட்டும் தூர் வாரப்பட்டுள்ளன. வறண்ட கண்மாய்களில் விவசாயிகள் வண்டல் மண் சேகரிக்க பொதுப்பணித்துறை தடை விதிப்பதுடன், அபராதமும் வசூலிக்கின்றனர்.
வண்டல் மண் சேகரிப்பால் கண்மாய்கள் ஆழப்படுத்தப்படுகின்றன. இதை, உணர்ந்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் முன்னிலையில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் கண்மாய்கள் ஆழப்படுத்தப்படும். மண்வளம் காக்கப்பட்டு விவசாயிகள் பயனடைவர்.
மதுரை மாவட்டத்தில் 900 கண்மாய்கள் உள்ளன. பராமரிப்பு இன்றியும், வரப்பு கால்வாய்களில் அடைப்புகள் நீக்கப்படாமல் இருப்பதாலும், மழை பெய்தாலும் பல கண்மாய்கள் நிரம்புவதில்லை. எனினும், அந்தந்த பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் சேகரித்து பாசன வசதி பெறுகின்றனர். சில நிலங்களில் கிணற்று நீரை பயன்படுத்தியும் விவசாயம் நடக்கிறது.
விவசாயிகளின் நண்பன்: பசுமை புரட்சிக்காக ரசாயன உரங்களை பயன்படுத்தினர். இதனால், மண் வளம் முழுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களுக்கு செழுமை சேர்க்கும் நுண்ணுயிர்களை ராசாயன உரங்கள் அழிந்து வருகின்றன. இதைத்தடுக்கும் வகையில், "விவசாயிகளின் நண்பன்'
என அழைக்கப்படும் மண்புழுக்களை வளர்த்து, "மண்புழு உரம்' தயாரித்து வயல்களில் பயன்படுத்துகின்றனர். தென்மேற்கு பருவமழை முழுமையாக பெய்யாததால் கண்மாய்கள் வறண்டு விட்டன. இங்கு கிடைக்கும் வண்டல் மண்ணில் நுண்ணுயிர் சத்துக்கள் மிகுந்துள்ளன. இவற்றை விவசாயிகள் சேகரித்து வயல்களில் பரப்புகின்றனர். இதனால் மண்வளம் காக்கப்படுகிறது.
தடை செய்யக்கூடாது: கண்மாய்களை பொதுப்பணித்துறையினர் பராமரிக்கின்றனர். எனினும்,
ஓரிரு கண்மாய்கள் மட்டும் தூர் வாரப்பட்டுள்ளன. வறண்ட கண்மாய்களில் விவசாயிகள் வண்டல் மண் சேகரிக்க பொதுப்பணித்துறை தடை விதிப்பதுடன், அபராதமும் வசூலிக்கின்றனர்.
வண்டல் மண் சேகரிப்பால் கண்மாய்கள் ஆழப்படுத்தப்படுகின்றன. இதை, உணர்ந்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் முன்னிலையில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் கண்மாய்கள் ஆழப்படுத்தப்படும். மண்வளம் காக்கப்பட்டு விவசாயிகள் பயனடைவர்.