நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
19/8/2012, 4:59 am
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரமின்மையால், டெங்கு போன்ற கொடும் நோய்கள் பரவுகின்றன. நகராட்சி முதல் ஊராட்சி வரை, குப்பைகள், சாக்கடை கழிவுநீர்கள் தேக்கத்தால், பலரும் பாதிக்கும் நிலை தொடர்கிறது.

குப்பைகள், கழிவுநீரை முறையாக அகற்றாததால், கொசு உற்பத்திக்கும் இங்கு பஞ்சமில்லை. பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், இருக்கிற பணியாளர்களை கொண்டாவது, இதனை அகற்ற முன்வரலாம். ஆனால் அதிகாரிகளோ, இதில் போதுமான கவனம் செலுத்துவதில்லை.

இதன் காரணமாக, பொதுமக்கள் தரப்பில், புகார்கள் பல சென்றாலும், நடவடிக்கையும் இருப்பதில்லை. இதனாலே, கொசுக்கள் உற்பத்தியாகி, மக்களை பதம்பார்க்கிறது.
டெங்கு போன்ற கொடிய நோய் பரவி, உயிர்பலி ஆனபின்பே, அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம், செயல்படுத்தி வந்தால், இது போன்ற நோய் பரவலையும் தடுக்க முடியும். ஆனால், அதிகாரிகள் இதற்கான எந்த முன்னொச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவது இல்லை.
இதன் சுகாதாரக்கேடு பெரும்பாலும் நகராட்சி, பேரூராட்சிகளிலேயே அதிகமாக உள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி, மழை காலங்களில் வீடுகளிலும் புகும் நிலை உள்ளது. இதனால், குடியிருப்போர் படும் அவதிக்கும் அளவேயில்லை.

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளை சுகாதாரமாக்க, அதிகாரிகள் மனது வைத்தால் போதும். ஆனால் இதை யாரும் கண்டுகொள்ளவதில்லை. இதனாலேயே, இங்கு சுகாதாரமானது கேள்விக் குறியாக உள்ளது. இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:

எம். கதிரேசன்(வத்திராயிருப்பு): சுகாதாரம் என்ற வார்த்தையே பயன்படுத்த முடியாத அளவிற்கு, எங்குபார்த்தாலும், சுகாதாரச் சீர்கேடுகள். மக்கள் குப்பைக் குவியல்களுக்கு மத்தியில்தான் வாழவேண்டியுள்ளது வத்திராயிருப்பில் அக்ரஹாரப் பின்பகுதிகளான நாராசுரம் சந்துகளில், பேரூராட்சி குப்பை கிடங்குகளை விட, அதிகமாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இது வாறுகால்களையும் மூடிவீடுகிறது. அலுவலகத்தில் முறையிட்டால், சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை என்கிறார்கள்.

சுகாதார பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால், ஓரளவு நிலைமையை கட்டுப்படுத்தலாம்.
கிருஷ்ண ராஜன்(ராஜபாளையம்): ராஜபாளையம் நகராட்சி பலபகுதியில், வாறுகால் நீர் வெளியேற வழிஇல்லை.

குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டின் இருபுறமும் உள்ள வாறுகால்,பராமரிப்பு இன்றி நீர் வெளியேறவில்லை. மழை பெய்தால், கழிவுநீரும் ரோட்டில் தேங்கி, மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.

அதே ரோட்டில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரி எதிரே, நிலத்தடி பெரியகுகுழாயில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இதை சீரமைத்தாலே, இப்பகுதி சுகாதார கேடும் குறையும். இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். துர்நாற்றம், கொசு தொல்லை வேறு உள்ளது.
மல்லையா (அருப்புக்கோட்டை): அருப்புக்கோட்டை நகராட்சி தூம்பக்குளம், செவல் கண்மாயில், நகரில் உள்ள அனைத்து குப்பை மற்றும் கழிவு நீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாகிறது.
அப்பகுதி குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, குடியிருக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அந்த ஊரணிதான் அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது குப்பை, கழிவு நீர் தேங்குவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. இதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வக்குமார் (காரியாபட்டி): காரியாபட்டி பெரியார்நகர், செவல்பட்டி, ஜெகஜீவன்ராம் தெருவில், சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்தும், குப்பைகளை தொட்டியில் கொட்டாமல், கீழே கொட்டுகின்றனர்.

அவற்றை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, கொசு மருந்து, குப்பைகளை அகற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. மல்லாங்கிணரில்ஊரணியில், குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு தொல்லை வேறு உள்ளது.
குருசாமி (செட்டியார்பட்டி): பேரூராட்சி பகுதிகளிள் சேரும் குப்பைகளை அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது.கழிவு நீர் வாறுகால்களிள் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உருவாகுகின்றன.இதனால் குடியிருப்பவர்களுக்கு தொற்று நோய்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலை உள்ளது.

சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி,கழிவு நீர் செல்லும் வாறுகால்களிள் தண்ணீர் தேங்கமல் சுத்தம் செய்தால், சுகாதாரமான நகரை உருவாக்கலாம். இதற்கு அதிகாரிகள்தான் மனம் வைக்க வேண்டும்.

கே.எஸ்.பழனிக்குமார்(சாத்தூர்) :மக்கும்,மக்காத குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது. தொட்டிகளில் குப்பைகளை போடாமல்,வாறுகால், நீர்நிலைகளில் போடுவதால், கழிவுநீர்தேங்கி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உடல்நலப்பாதிப்பு ஏற்படுகிறது. நகர், கிராம ஊராட்சிகளில் சுகாதாரபணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. வளர்ச்சிக்கு தகுந்தாற் போல், சுகாதார பணியாளர்களின், எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

எம். திருமலை(ஸ்ரீவில்லிபுத்தூர்):
நகராட்சி பகுதிகளில் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி ,வாறுகால்கள் சுத்தம் செய்யப்படாமல் கழிவு நீர் தேங்கி நோய்களை பரப்புகிறது. சுத்தம் செய்வதை தனியாருக்கு தாரை வார்ப்பதால், பணிகள் சரிவர நடப்பதில்லை.

கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்காமல், முன்பு போல் வாறுகால்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை மாதம் ஒரு முறை சுத்தம் செய்யப்படாத நிலை உள்ளது.
இதனால் கொசுக்களால் மக்களுக்கு டெங்கு போன்ற நோய்கள் வருகிறது. சுகாதார பணிகள் நடப்பதை ஆய்வாளர்களும் நேரில் வந்து கண்காணிக்க வேண்டும்.

- தினமலர் நிருபர் குழு -

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

முன்னெச்சரிக்கை இல்லை; பாதிப்பிற்கு பின்பே நடவடிக்கை

From எழுத்ததிகாரன்

Topic ID: 279

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...