ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முறையான குடிநீர் சப்ளை கோரி, காலிகுடங்களுடன் இந்த ஆண்டும் பெண்கள் மறியலில் ஈடுபட துவங்கி உள்ளனர். வழக்கம்போல போலீஸ், அதிகாரிகளின் சமரசத்தால் மறியல் கைவிடப்பட்டது. முறையான சப்ளைக்கும், நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை,ராஜபாளையம் நகராட்சி நீர்தேக்கத்தில் சேமித்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக இதன் நீர்தேக்கமே உள்ளது.
தற்போது மழை பெய்யாததால், மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், தண்ணீருக்காக மலையடிவாரம் வரதுவங்கி உள்ளன.
நகராட்சி குடிநீர் தேக்கத்திலும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால்,தேக்கத்தை சுற்றி உள்ள ஆழ்துளை குழாய்கள் மூலம், தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை நடக்கிறது.
குடிநீர் சப்ளை நடக்கும் பகுதிகள் குறித்து, முறையான அறிவிப்பு இல்லாததால், குடிநீருக்காக மக்கள் வீடுகளிலே காத்திருக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்குதல், முறையான சப்ளை கோரி, ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வார்டு மக்கள் மறியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
அதுன்படி ராஜபாளையம்-சங்கரன்கோவில் முக்கில், காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்தும் பாதித்தது. அசோகன் டி.எஸ்.பி., நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சின்படி, மக்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக, மக்கள் புலம்புகின்றனர். சீரான குடிநீர் சப்ளை, முறையான அறிவிப்பையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை,ராஜபாளையம் நகராட்சி நீர்தேக்கத்தில் சேமித்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக இதன் நீர்தேக்கமே உள்ளது.
தற்போது மழை பெய்யாததால், மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், தண்ணீருக்காக மலையடிவாரம் வரதுவங்கி உள்ளன.
நகராட்சி குடிநீர் தேக்கத்திலும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால்,தேக்கத்தை சுற்றி உள்ள ஆழ்துளை குழாய்கள் மூலம், தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை நடக்கிறது.
குடிநீர் சப்ளை நடக்கும் பகுதிகள் குறித்து, முறையான அறிவிப்பு இல்லாததால், குடிநீருக்காக மக்கள் வீடுகளிலே காத்திருக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்குதல், முறையான சப்ளை கோரி, ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வார்டு மக்கள் மறியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
அதுன்படி ராஜபாளையம்-சங்கரன்கோவில் முக்கில், காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்தும் பாதித்தது. அசோகன் டி.எஸ்.பி., நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சின்படி, மக்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக, மக்கள் புலம்புகின்றனர். சீரான குடிநீர் சப்ளை, முறையான அறிவிப்பையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.