Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
19/8/2012, 1:07 am
100 சதவிகிதம் ஊழலை ஒழிக்க முடியும்!

லஞ்சம், ஊழல் என்பது ஒரு வியாதியைப் போல் நாடெங்கும் நிரம்பியிருக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் எங்கும் எதையும் சாதிக்க முடியாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இருப்பவர்கள் எல்லா இடத்திலும் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் இல்லாதவர்கள் நிம்மதியாக தூங்கக்கூட முடியாமல் திண்டாடுகிறார்கள்.

கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை, அரசு, அரசு அலுவலகங்கள் என்று எங்கு பார்த்தாலும் லஞ்சம்... யார் அதிக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாத் துறையும் வளைந்து கொடுக்கிறது.

லஞ்சம் கொடுக்ககூடாது என்று வைராக்கியமாய் இருப்பவனைக்கூட இந்த சமூகம் விடுவதில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் லஞ்சம் கொடுக்க வைக்கிறது. எனவே இந்த பிரபஞ்சம் லஞ்சத்திலிருந்து விடுபட என்னதான் வழி? என்று அடிக்கடி என் மனம் சிந்தித்துக் கொண்டே இருந்தது. சில நேரங்களில் இதிலிருந்து விடுபட வழியே இல்லையோ என்று கூட தோன்றும். ஆனால் "தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை" என்ற தத்துவத்தை கையெழுத்தாக வைத்திருக்கும்போது எப்படி முடியாமல் போகும்? என்று மிகவும் ஆழமாக சிந்திக்க தொடங்கிய போதுதான் இதற்கான வழி கிடைத்தது!

ஆம்! இந்த நாட்டிலிருந்து மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்திலிருந்தே நிச்சயமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதற்கான ஒரு வழி தற்போது கிடைத்துள்ளது. ஆனால் இதை யாரிடம் சொல்வது? எப்படி செயல்படுத்துவது? என்பது ஒரு சிக்கல் நிறைந்த கேள்வியாகவே இருந்தது! மத்திய அரசு நினைத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் அரசின் கவனத்திற்கு இதை எப்படி கொண்டு செல்வது?...

என்று சிந்தித்தபோதுதான் சினிமா என்ற ஒரு மிகப்பெரிய மீடியா மூலம் இதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக உருவாக்கப்பட்ட கதைக் களம்தான் தகாதவன்!!

ரூபாய், டாலர், ஈரோ என்று வெவ்வேறு வடிவங்களில் புழங்கிக் கொண்டிருக்கும் பணம், அரசாங்கத்தின் கணக்கிற்கு வந்தால் வெள்ளை பணம், அதுவே அரசாங்கத்தின் கணக்கில் வராமல் புழங்குமானால் அது கறுப்பு பணம். இந்த கறுப்பு பணம்தான் ஒரு ஜனநாயகத்தின் வளர்ச்சியையே அழிக்கிறது. அரசியல்வாதிகளை மக்களுக்கு நன்மை செய்யவிடாமல் ஏமாற்றவும் வைக்கிறது. எல்லாத்துறைகளும் இந்த கறுப்பு பணத்தின் மீதான மோகத்தால் எல்லா தீமையான செயல்களுக்கும் வளைந்து கொடுக்கிறது.

இந்த பணம் என்பதே இல்லையென்று தடை செய்யபடுமானால் எப்படியிருக்கும்? என்று கற்பனை செய்யுங்கள்...

உதாரணமாக, மத்திய அரசு இன்று ஒரு அறிக்கை விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

வருகிற 01.01.2012 ஆம் வருடத்திலிருந்து ரூபாய் தாள்களுக்கும், நாணயங்களுக்கும் இனி மதிப்பில்லை. அவரவர் தங்களிடம் உள்ள பணங்களை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து தங்கள் கணக்கிற்கு ஒரு ஸ்வைப்பிங் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இனி எல்லா பரிமாற்றங்களுக்கும் இந்த அட்டையையே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் பயன்படுத்தும் போதும் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் சேமிப்புதொகை குறையும். ஒருவரிடம் இருந்து நீங்கள் பணம் பெறுவதற்கும் அல்லது நீங்கள் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதற்கும் ரூபாய் நோட்டுகள் இல்லாமல், இதற்கென உருவாக்கப்படும் டிஜிட்டல் மணி டிரான்ஃபர் கார்டுகள் (DMTC) (ATM கார்டு போன்றது) மூலமாகவோ அல்லது Internet Banking மூலமாக மட்டுமே பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும்?...

ரூபாய் நோட்டுகளுக்கு மதிப்பில்லை என்றவுடன் நாட்டில் உள்ள கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இதன்பிறகு பணத்தை எங்கும் முதலீடு செய்ய முடியாது. மதிப்பு இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் எல்லா கறுப்பு பணங்களும் காகிதக் குப்பைகளாக வீதிக்கு வரும்! டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாறிக்கொள்வதால் அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பார்வைக்கு வரும்! ஒவ்வொரு தனி நபரின் வரவு-செலவு கணக்குகளை மிகத் துள்ளியமாக கணக்கிட முடியும்!

நாம் எங்கும் எவருக்கும் லஞ்சம் என்பதே கொடுக்க தேவைப்படாது. ஒருவேளை அவர்களுடைய கணக்கிற்கு நம்மை தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்தம் செய்வார்களானால் அதற்கான தொகைக்கு அவர்கள் அரசிற்கு கணக்கு காட்ட வேண்டியதிருக்கும். எனவே யாரும் லஞ்சமாக தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்திக்க மாட்டார்கள்.

அரசியல்வாதிகள் முதல் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் வரை அனைவருடைய வருமானத்தையும் மிகவும் எளிமையாக அரசால் கண்காணிக்க முடியும். இதன்பிறகு நாட்டில் கறுப்புப்பணம் என்பதே இல்லாமல் வெள்ளையாகவே இருக்கும். ரூபாய் நோட்டுகளும், சில்லரை நாணயங்களும் இல்லாமல் வெறும் எண்ணியல் முறையில் நம்முடைய பரிமாற்றங்கள் நடைபெறுவதால், நாட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் முற்றிலும் மறைந்து போவார்கள். ஏனென்றால்? பிச்சையிடுவதற்கு நம்மிடம் நாணயங்களும் இருக்காது, ரூபாய் தாள்களும் இருக்காது. எனவே ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் உழைத்து சாப்பிடவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மனித உழைப்பு அதிகமாகும்.

பங்குச்சந்தை முதல் ஒவ்வொரு பெட்டிக்கடைகள் வரை ஸ்வைப்பிங் இயந்திரம் இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர்களால் யாருக்கும் வியாபாரம் செய்யமுடியாது!

ஒரு தீக்குச்சு முதல் குளிர்சாதன பெட்டி வரை எதை வாங்க வேண்டுமானாலும் நாம் ஸ்வைப்பிங் அட்டை வழியாகவே வாங்கமுடியும்.

டிராஃபிக் போலீஸுக்கு யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. லஞ்சம் பெறவும் முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது சட்டப்படி செயல்பட முன்வருவார்கள். டூ-வீலர் ஓட்டுபவர்கள் தங்களிடம் இருக்கும் DMTC அட்டை மூலமே அபராதத் தொகையை செலுத்த முடியும். வரி ஏய்ப்பு என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்!

எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி நிதியினை ஏப்பம் விட முடியாமல் தொகுதி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்!

உலகத்தில் யாருமே தவறு செய்ய பயப்படுவதில்லை... அந்தத் தவறுகள் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பயப்படுகிறார்கள்... எனவே இந்த டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றால் அனைவரது நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும். எனவே தவறுகள் நடக்க வாய்பே இருக்காது!

எனவே இன்னும் சில ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றமே நம் நாட்டில் நிகழும் என்று என் மனம் 100 மடங்கு உறுதியாய் சொல்கிறது. அரசாங்கத்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் என்றால்... அந்த அரசாங்கத்தை கையில் எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன்...

காகிதத்தை கப்பலேற்றிவிட்டு, கணிணியால் கையாள முடியும்! டெக்னாலஜியில் உருவாகிறது டிஜிட்டல் இந்தியா!!

To a brave heart, Nothing is Impossible!

- எழுத்ததிகாரன்

Message reputation : 100% (17 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

100% ஊழலை ஒழிக்க முடியும்!

From எழுத்ததிகாரன்

Topic ID: 266

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...