Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
8/8/2012, 5:28 am
விருத்தாசலம் : சமூக விரோதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.

போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,500 மாணவிகள் படிக்கின்றனர். 52 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

பாதுகாப்பில்லை: பள்ளியில் சில வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள் மட்டுமே கான்கிரீட் கட்டடத்தில் உள்ளன. மற்ற வகுப்புகள் ஆஸ்பெஸ்டாஷ் கூரையாலான ஷெட்களில்தான் இயங்குகின்றன. பெரும்பாலான வகுப்பறைகள் கதவுகள், ஜன்னல்கள் இல்லாமல் பாதுகாப்பின்றி உள்ளது. பள்ளி நுழைவு வாயிலில் கேட் இருந்தும் பூட்டப்படுவதில்லை. பாதுகாப்பிற்கு வாட்ச்மேன் கிடையாது. இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது.

படிப்பு பாதிக்கிறது கான்கிரீட் கட்டட வகுப்பறை கதவு, ஜன்னல்கள், கழிவறை கதவுகள், வகுப்பறையில் உள்ள டெஸ்க், பெஞ்ச் ஆகியவற்றை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்துவதுடன், சிலவற்றை எடுத்துச் சென்று விடுகின்றனர். பள்ளிச் சுற்றுச் சுவரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சுற்றுச் சுவரை பல இடங்களில் உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரு பகுதியில் 50 மீட்டர் அளவிற்கு சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு திறந்த வெளியாக கிடக்கிறது. இதன் வழியாக பொது மக்கள் மற்றும் ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதால் வகுப்பறைகளில் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பும் பாதிக்கிறது.

உபகரணங்கள் திருட்டு வேதியியல், இயற்பியல் ஆய்வுக்கூடங்களின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த அறிவியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. எஞ்சிய உபகரணங்களுடன் ஆய்வுக் கூடத்தை பள்ளி நிர்வாகம் வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றியுள்ளது.

மதுபாட்டில், சிகரெட்இரவில், சமூகவிரோதிகள் திறந்தவெளி வகுப்பறைகளில் கிடக்கும் டெஸ்க், பெஞ்சுகளை பள்ளி வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தூக்கி வந்து போட்டு, அதில் "ஹாயாக' அமர்ந்து சரக்கடித்து விட்டு நிதானமாக இருந்தால் அப்படியே விட்டுச் செல்வதும்; போதை தலைக்கேறினால் பெஞ்ச் மற்றும் டெஸ்க்குகளை உடைத்து விட்டும் செல்கின்றனர். காலையில் வகுப்பிற்கு வரும் மாணவிகள் வகுப்பறைகளில் சிதறிக்கிடக்கும் சிகரெட் துண்டுகள், மது பாட்டில்களை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் அதனை அருவருப்புடன் அகற்றிவிட்டு வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் அவலம் உள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிக்கு வாட்ச்மேன் ஒருவரை நியமிப்பதுடன், பழுதடைந்த சுற்றுச் சுவர், ஜன்னல் கதவுகளை சீரமைத்துத் தர மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோமியோக்கள் தொல்லை: கழிவறைகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியதால், மாணவிகள் பள்ளி வளாகத்திலுள்ள முட்புதர் மறைவை இயற்கை உபாதைக்கு பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் பள்ளி மைதானத்திற்கு வந்து விளையாடுவதுடன், படிக்கும் மாணவிகளையும் கேலி செய்கின்றனர். தட்டிக்கேட்கும் ஆசிரியர்களை, கட்சி, அல்லது அமைப்புகளைக் கூறி மிரட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி காலை, மாலை நேரங்களில் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு மாணவிகளை கேலி செய்யும் ரோமியோ கும்பலை போலீசார் விரட்டியடிக்க வேண்டும்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பெண்கள் பள்ளியில் சமூக விரோதிகள் அடாவடி: அச்சத்தில் உறைந்துள்ள மாணவிகள்

From எழுத்ததிகாரன்

Topic ID: 126

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...