சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் 27ம் தேதி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு ஏதேனும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 27.8.12 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 27.8.12 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.