Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
15/8/2012, 7:08 am
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், வார நாட்களில் வரும் புதன் கிழமைதான் நல்ல காரியங்கள் செய்ய உகந்த நாள் என்று நாம் அதை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதன் கிழமைதான் வாரா வாரம் வந்து கொண்டிருக்கிறதே? இது எப்படி கிடைக்காமல் போகும் என்று நாம் யாரும் சிந்திப்பதில்லை...

பொன் என்பது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய செல்வத்தை குறிக்கும். புதன் என்பது கல்வியை குறிக்கும். எனவே, ஒருவருக்கு எந்த நேரத்திலும் செல்வங்கள் கிடைக்கலாம். பிறருடைய செல்வங்களைக் கூட நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், கல்வியானது அவ்வாறு கிடைக்க முடியாது. நாம் படித்து வளர்த்துக்கொண்டால் மட்டுமே கல்வியறிவு பெற முடியும். பிறரால் நமக்கு கிடைக்காது. என்பதை உணர்த்தும் விதமாக சொல்லப்பட்டதுதான். இந்த பழமொழி என்பது எனது கருத்து. அதனால்தான் "இளமையில் கல்" என்றும் சொல்லியிருக்கக் கூடும். காலம் தவறிவிட்டால் பிறகு கல்வி பயில முடியாது அல்லவா. (இன்னைக்கு இருக்குற இன்டர்நெட் வசதியெல்லாம் அன்னைக்கு இருந்திருக்காதுல்ல... ஒருவேளை இருந்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்களா என்னவோ...)

இதையே ஜோதிடத்தோடு ஒப்பிட்டும் சொல்லலாம், வந்தது வந்துட்டீங்க அப்படியே இதையும் சும்மா படிச்சு பாருங்க. இதுவும் நம்புற மாதிரிதான் இருக்கும்.

அதாவது, ஒருவருடைய ஜாதகத்தில் தனது பார்வையின் மூலம். யோகங்களை வழங்கக்கூடிய கிரகமான குரு பகவான் அறிவியல் கூற்றுப்படி பொன் நிறம் உடையதாக சொல்லப்படுகிறது. எனவே பொன் என்பதற்கு குருவை அடையாளமாக கொள்ளலாம். குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் எல்லோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். மேலும் குரு இருக்க, குரு பார்க்க கோடி குற்றம் நிவர்த்தியாகி விடும் என்பது சோதிட விதி. So, பொன் கிடைத்து விட்டதா?

ஆனால், புத்தியையும், அறிவையும் வழங்கக்கூடிய கல்விகாரகன், வித்யாகாரகனான புதன் கிரகத்தின் பலன் எல்லோருக்கு முழுமையாக கிடைப்பதில்லை. காரணம், புதன் கிரகமானது எப்போதும் சூரியனோடு பயணிக்கக் கூடியது. அதாவது நமது ராசிக்கட்டத்தில் புதனானது சூரியனோடு சேர்ந்து இருக்கும். அல்லது சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும். பொதுவாக சூரியனோடு சேரும்போது எல்லா கிரகங்களும் தங்கள் பலத்தை இழந்துவிடும் என்பது சோதிட விதி.

எனவே எல்லா நேரத்திலும் சூரியனோடு இருக்கக் கூடிய புதன் தனது பலத்தை இழந்து விடுகிறார். அதனால் புதனுடைய முழு பலனும் நமக்கு கிடைப்பதில்லை. அதுமட்டும் இல்லாமல், சூரியனை சுற்றும் கிரகங்களில் புதன் மிகவும் வேகமாக சுற்றிவரக்கூடிய கிரகம். எனவே சூரியனின் பாதிப்பிலிருந்து விலகி இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பொன் கிடைத்தாலும்: (குருவின் பார்வை பலன் முழுமையாக கிடைத்தாலும்) புதன் கிடைக்காது (புதன் கிரகத்தின் முழு பலன் கிடைக்காது) என்று சொல்லியிருக்கிறார்கள் சோதிடத்தை கணித்த சான்றோர்கள்.

குறிப்பு:
புதனானது உச்சம் பெற்ற லக்கினாதிபதியுடன் சேரும்போது, அல்லது தன்னோடு சேரும் கிரகங்களின் வலிமை, தான் இருக்கும் இடத்தின் அதிபதியின் பலம், காரக பலம், பரிவர்த்தனை யோகம் இவற்றால் மட்டுமே புதனின் பலம் ஒருவருக்கு முழுமையாக கிடைக்க முடியும். இல்லையென்றால் சூரியனுடைய ஒளியில் அஸ்தங்கமடைந்து வலுவிழந்து விடும்.

அறிவுக்கு காரகன் புதன் அல்லவா? ஆனால், உலகத்தில் அறிவாளிகள் குறைவுதானே? எனவே, எல்லோருக்கும் புதன் அருள் கிடைப்பதில்லை.
இதெல்லாம் நானா சொல்லுறேன்... எல்லாம் என் கிரகம்... இப்படியெல்லாம் எழுத சொல்லுது. இதுமாதிரி நிறைய சொல்லலாம்.... எழுத்துக்கு காரகனான புதனின் முழு பலம் கிடைத்தால்.......

- எழுத்ததிகாரன்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது - எழுத்ததிகாரன்

From எழுத்ததிகாரன்

Topic ID: 173

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...