டெல்லி: இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான், அடுத்து வரும் நியூசிலாந்திற்கு எதிரான டுவென்டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் இர்பான் பதானுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அவர், ஒருநாள் தொடரில் 8 விக்கெட்களும், டுவென்டி20 போட்டியில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்திற்கு எதிரான 2 டுவென்டி20 போட்டிகளிலும், டுவென்டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கும் இந்திய அணியில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டுவென்டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்த அவர் தயாராக இருப்பதாக, ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு டுவென்டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி, திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. இதற்கு நான் தயாராக உள்ளேன்.
கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இதன்மூலம் தற்போது எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கற்று கொண்டேன். கிரிக்கெட் ஆடுகளத்தில் உள்ள நேரத்தை மகிழ்ச்சியாக மாற்றி கொள்ள விரும்புகிறேன்.
கடந்த கால சம்பவங்களை திரும்பி பார்க்காமல், எதிர்காலத்தை நோக்கி முன்னேற முயற்சி செய்து வருகிறேன். வெற்றிகளை பெற தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
இலங்கைக்கு எதிரான டுவென்டி20 போட்டியில் தில்ஷனை அவுட் செய்த பந்து ஸ்விங் ஆகி சென்ற விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல 34 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்ததை நினைத்து திருப்தி அடைந்தேன். இது போன்ற சிறுசிறு சம்பவங்களின் மூலம் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். இதன்மூலம் எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் இர்பான் பதானுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அவர், ஒருநாள் தொடரில் 8 விக்கெட்களும், டுவென்டி20 போட்டியில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்திற்கு எதிரான 2 டுவென்டி20 போட்டிகளிலும், டுவென்டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கும் இந்திய அணியில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டுவென்டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்த அவர் தயாராக இருப்பதாக, ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு டுவென்டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி, திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. இதற்கு நான் தயாராக உள்ளேன்.
கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இதன்மூலம் தற்போது எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கற்று கொண்டேன். கிரிக்கெட் ஆடுகளத்தில் உள்ள நேரத்தை மகிழ்ச்சியாக மாற்றி கொள்ள விரும்புகிறேன்.
கடந்த கால சம்பவங்களை திரும்பி பார்க்காமல், எதிர்காலத்தை நோக்கி முன்னேற முயற்சி செய்து வருகிறேன். வெற்றிகளை பெற தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
இலங்கைக்கு எதிரான டுவென்டி20 போட்டியில் தில்ஷனை அவுட் செய்த பந்து ஸ்விங் ஆகி சென்ற விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல 34 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்ததை நினைத்து திருப்தி அடைந்தேன். இது போன்ற சிறுசிறு சம்பவங்களின் மூலம் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். இதன்மூலம் எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய முடியும் என்று நம்புகிறேன் என்றார்.