வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி வெளிவரும் படம் அட்டக்கத்தி. முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்தப் படத்தை யாரும் வாங்க முன்வராமல் இருந்தார்கள். தற்போது ஸ்டூடியோ கிரீன்ஸ் ஞானவேல்ராஜா படத்தை வாங்கி வெளியிடுகிறார். இந்தப் படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத புதுவிதமான கதை என்று சொல்லப்படுகிறது.
சென்னை மாநகரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கிறது. கோவில் திருவிழா, மரத்தடி பஞ்சாயத்து, கம்மாக்கரை காதல், புல்லட் மைனர் என்று கிராமத்தின் அடையாளங்களோடு இவை இருக்கிறது. ஆனாலும் மாநகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். இந்த கிராமத்து மக்கள் நகரத்திற்கு வருவார்கள், சினிமா பார்ப்பார்கள், வேலை பார்ப்பார்கள். பர்ச்சேஸ் பண்ணுவார்கள், மீண்டும் கிராமத்துக்கே சென்று கிராமத்து வாழ்க்கையை தொடர்வார்கள். இப்படிப்பட்ட ஒரு கிராமத்தை கதை களமாக கொண்ட படம். அவர்களின் வாழ்க்கை முறை நகரத்துக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பு இதுபற்றி படத்தில் பதிவு செய்கிறார்கள். நகர்புறத்தில் வேலை பார்த்துக் கொண்டே கிராம பின்னணியில் வாழ நினைப்பவர்களுக்கு இந்தப் படம் வழிகாட்டியா இருக்கும் என்கிறார்கள்.
சென்னை மாநகரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கிறது. கோவில் திருவிழா, மரத்தடி பஞ்சாயத்து, கம்மாக்கரை காதல், புல்லட் மைனர் என்று கிராமத்தின் அடையாளங்களோடு இவை இருக்கிறது. ஆனாலும் மாநகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். இந்த கிராமத்து மக்கள் நகரத்திற்கு வருவார்கள், சினிமா பார்ப்பார்கள், வேலை பார்ப்பார்கள். பர்ச்சேஸ் பண்ணுவார்கள், மீண்டும் கிராமத்துக்கே சென்று கிராமத்து வாழ்க்கையை தொடர்வார்கள். இப்படிப்பட்ட ஒரு கிராமத்தை கதை களமாக கொண்ட படம். அவர்களின் வாழ்க்கை முறை நகரத்துக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பு இதுபற்றி படத்தில் பதிவு செய்கிறார்கள். நகர்புறத்தில் வேலை பார்த்துக் கொண்டே கிராம பின்னணியில் வாழ நினைப்பவர்களுக்கு இந்தப் படம் வழிகாட்டியா இருக்கும் என்கிறார்கள்.