Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
8/8/2012, 4:59 am
ஆடு மாடுகளைப் போல் அப்பாவித் தொழிலாளர்கள்: விபத்துக்களில் பலியாகும் பரிதாபம். Worker10
வட மாநிலங்களிலிருந்து வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை வாங்கப்படுகின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு கூட ஆள் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு விபத்து பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குறைந்த கூலி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிக்கு, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில், 22,238 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிந்தனர். இவர்கள் அதிகமாக கட்டுமானப் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு, 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கின்றனர். பணி நடக்கும் இடங்களிலேயே தங்க வைக்கப்படுவதால், அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர்.

பீகார், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில், போதிய அளவு வேலை இல்லாமல். தமிழகத்திற்கு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

குடிசையில் தங்கினர்: தனியார் பொறியியல் கட்டுமானப்பணியில், வட மாநிலங்களைச் சேர்ந்த, 53 பேர் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து வந்தவர் சுதானந்தா. இவரின் சகோதரி, வட மாநில வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது உதவியுடன் ஆட்களை அழைத்து வந்து, கட்டடத்திற்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

ஒருவருக்கு, 250 ரூபாய் சம்பளம் பேசி, பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு, 200 ரூபாய் மட்டும் வழங்கியுள்ளார். கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே குடிசை அமைத்து தங்க வைத்துள்ளார். இதேபோல், வட மாநிலங்களிலிருந்து, தொழிலாளர்களை அழைத்து வர ஏராளமாக இடைத்தரகர்கள் உள்ளனர். இளைஞர்களை அழைத்து வந்து ஆடு, மாடுகள் போல் கொட்டடிகளில் தங்க வைக்கின்றனர்.

* வசிப்பிடங்கள் தகரம் வேய்ந்த கூரைகளில் அமைக்கப்படுகின்றன.
* கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்வது இல்லை.
* அடையாள அட்டை எதுவும் வழங்கப்படுவதில்லை.
* பணியின்போது இறந்தால், நிவாரணம் கிடைக்க, காப்பீடு செய்வதில்லை.
* மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்வது இல்லை.

இந்தியாவில் மற்றொரு மாநிலத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் பணிபுரியும் இடத்தில் அகதிகளை விடக் கேவலமாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களின் அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.எவ்வித அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இல்லாமல் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து நடந்தது எப்படி:
காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு., செயலர் முத்துக்குமார் கூறியதாவது: இரண்டு மாதத்தில் செய்ய வேண்டிய வேலையை, 20 நாட்களில் செய்து முடிக்க நினைத்ததால் தான், விபத்து நடந்துள்ளது. சிமென்ட் கலவை ஈரம் காய்வதற்கு முன்பாகவே, சுவர் கட்டத் துவங்கி உள்ளனர். கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்ததால், வேகமாகப் பணியை முடிக்க திட்டமிட்டதே, விபத்திற்குக் காரணம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைக்காக இடம் பெயர்ந்து வருவோரின் பெயர், முகவரி போன்றவற்றை தொழிலாளர் நலத்துறை பெற்று, அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை இல்லாததால், இறந்தவர்களை அடையாளம் காண்பதே சிரமமாகிவிட்டது. இடம் பெயர்ந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக, சட்ட விதிகள் உள்ளன. அவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. அவர்களை வேலைக்கு அழைத்து வரும் நிறுவனங்கள், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும். குறைந்த கூலிக்கு அவர்களை அழைத்து வந்து, அதிக நேரம் வேலை வாங்குகின்றனர். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்தார்.

நன்றி
தினமலர்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஆடு மாடுகளைப் போல் அப்பாவித் தொழிலாளர்கள்: விபத்துக்களில் பலியாகும் பரிதாபம்.

From எழுத்ததிகாரன்

Topic ID: 123

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...